MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • விவசாயம்
  • 1 கிலோ விதை ரூ.3000! வறட்சியில் காய்க்கும் தங்கம்! மாற்று பயிர் செய்யும் விவசாயிகள்!

1 கிலோ விதை ரூ.3000! வறட்சியில் காய்க்கும் தங்கம்! மாற்று பயிர் செய்யும் விவசாயிகள்!

மருத்துவ குணங்கள் நிறைந்த செங்காந்தள், அதிக வருமானம் தரும் வறட்சிப் பயிராக விளங்குகிறது. இதன் விதைகள் மற்றும் கிழங்குகள் மருந்து தயாரிப்பில் பயன்படுகின்றன, குறிப்பாக மூட்டுவலி, வெண்புள்ளி, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 09 2025, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கண்வலி கிழங்கு எனும் சிகப்பு தங்கம்
Image Credit : Instagram

கண்வலி கிழங்கு எனும் சிகப்பு தங்கம்

தமிழ்நாட்டின் முக்கிய மூலிகைப் பயிர்களில் ஒன்றாகப் பெயர் பெற்றது செங்காந்தள். கண்வலி கிழங்கு (Gloriosa superba) என்று அழைக்கப்படும் இந்தத் தாவரம், இயற்கையில் வளரும் பழமையான மூலிகைகளில் ஒன்று. சிறந்த மருத்துவ முக்கியத்துவம் கொண்ட இந்த செங்காந்தள், அதிக வருமானத்தைக் கொடுக்கக்கூடிய வறட்சிப் பயிராகவும் கணிக்கப்படுகிறது.

25
மருந்து தயாரிப்பிற்கு பயன்படுகிறது
Image Credit : Instagram

மருந்து தயாரிப்பிற்கு பயன்படுகிறது

இந்தப் பயிரின் விதைகள் மற்றும் கிழங்குகள் இரண்டுமே மருந்துத் தயாரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, இதன் விதைகளில் கோல்சிசின் (Colchicine) மற்றும் கோலசி கொசைடு (Colchicoside) போன்ற முக்கிய மூலப்பொருட்கள் நிறைந்துள்ளன. இவை மூட்டுவலி, வெண்புள்ளி, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அத்தியாவசியமான மருந்துகள் தயாரிக்க உதவுகின்றன. இதனால் தான் உலகளாவிய மருந்து நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஏற்றுமதி நடைபெறுகிறது.

Related Articles

Related image1
ரூ.5 ஆயிரம் முதலீடு! ரூ.10 ஆயிரம் வருமானம்! அட்டகாசமான தொழில்கள்! அற்புதமான வாய்ப்பு!
Related image2
ஒரு ஆடு விலை ரூ.1 லட்சம்! அள்ள அள்ள பணம் கொடுக்கும் "ஜமுனாபாரி" ஆடு வளர்ப்பு! குறைந்த முதலீடு கொட்டும் வருமானம்!
35
தண்ணீர் தேவையில்லை
Image Credit : Instagram

தண்ணீர் தேவையில்லை

செங்காந்தள் வெப்பமண்டலப் பகுதிகளில் சிறப்பாக வளரும் தன்மை கொண்டது. தமிழ்நாட்டின் அரியலூர், ஜெயங்கொண்டம், தாராபுரம், ஒட்டன் சத்திரம், திண்டுக்கல், நாகை,  திருவாரூர் மற்றும் கரூர் பகுதிகள் இதன் முக்கியக் கிழங்கு உற்பத்தி மையங்களாகத் திகழ்கின்றன. இந்தப் பயிருக்கு ஆடிப்பட்டம் மிகச் சிறந்த பருவமாகும். அதே சமயம், மானாவாரி மற்றும் இறவை இரண்டிலும் சாகுபடி செய்யலாம் என்பதால், நில நிலவரத்தைப் பொருத்து விவசாயிகள் எப்பொழுதும் பயிரிட முடியும்.

45
சாகுபடி நுட்பங்கள்
Image Credit : Instagram

சாகுபடி நுட்பங்கள்

செங்காந்தள் சாகுபடி செய்யப்படும் மண் மிகச் சீரான வடிகால் வசதி கொண்டதாகவும், மணல் கலந்த செம்மண் அல்லது களிமண் கலந்த மண்ணாகவும் இருக்க வேண்டும். விதைகள் அல்லது கிழங்குகள் மூலம் நட்டு வளர்க்கலாம். நட்ட பின் சுமார் 6 மாதங்களில் கிழங்குகளை அறுவடை செய்ய முடியும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் சராசரியாக 800-1000 கிலோ வரை கிழங்குகள் கிடைக்கக்கூடும்.

1 கிலோ விதை ரூ.3,000

சம்பாதிப்பு வேகமெடுக்கும் இன்னொரு காரணம், விதைகளின் விலை. தற்போது 1 கிலோ கண்வலி கிழங்கு விதைகள் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து கிடைக்கும் விதைகள் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை உறுதி செய்கின்றன. இதில் நன்மைகள் மட்டும் அல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பாரிய பங்களிப்பு உண்டு, ஏனெனில் இயற்கை மருந்துகளின் முக்கிய மூலப்பொருட்கள் இயற்கையான முறையில் பெறப்படுகின்றன.

55
ஏற்றுமதி வாய்ப்பு
Image Credit : Instagram

ஏற்றுமதி வாய்ப்பு

இந்தப் பயிருக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மையான தேவை உள்ளது. பெரும்பாலான மருந்து நிறுவனம் கோல்சிசின் பெறுவதற்கு இந்தியாவிலிருந்து செங்காந்தள் கிழங்குகளை இறக்குமதி செய்கின்றன. இந்த சாகுபடியின் மூலம் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் நல்ல வருவாயும், நற்பெயரும் கிடைக்கின்றது.

குறைந்த முதலீடு அதிக வருமானம்

இவ்வாறு, குறைந்த முதலீட்டிலும், வறட்சியான நிலத்திலும் வளர்த்துக் கொள்ளக்கூடிய செங்காந்தள், விவசாயிகளுக்கு ஒரு புதிய வருமான வாயிலாகவும், மருத்துவ உலகுக்கு அரிய மூலப்பொருள்களையும் வழங்கும் சிறப்புப் பயிராக திகழ்கிறது. இயற்கை மருத்துவப் பயிர்களை வளர்த்து வளம் பெரும் சாத்தியத்தை உங்களும் சந்திக்கலாம்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
விவசாயம்
விவசாயக் கடன்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved