MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • விவசாயம்
  • ஒரு ஆடு விலை ரூ.1 லட்சம்! அள்ள அள்ள பணம் கொடுக்கும் "ஜமுனாபாரி" ஆடு வளர்ப்பு! குறைந்த முதலீடு கொட்டும் வருமானம்!

ஒரு ஆடு விலை ரூ.1 லட்சம்! அள்ள அள்ள பணம் கொடுக்கும் "ஜமுனாபாரி" ஆடு வளர்ப்பு! குறைந்த முதலீடு கொட்டும் வருமானம்!

ஓசூர் பகுதியில் ஜமுனாபாரி ஆடு வளர்ப்பு விவசாயிகளுக்கு லாபகரமான துணைத் தொழிலாக மாறி வருகிறது. வேகமாக வளர்ந்து அதிக எடை தரும் இந்த ஆடுகள், கறி மற்றும் பால் உற்பத்தியில் நல்ல வருமானத்தை அளிப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் வளர்க்கின்றனர்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 04 2025, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அள்ளிக்கொடுக்கும் ஆடு வளர்ப்பு
Image Credit : google

அள்ளிக்கொடுக்கும் ஆடு வளர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் விவசாயிகள் முக்கியமாக நம்பும் துணைத் தொழிலாக கால்நடை வளர்ப்பு திகழ்கிறது. இதில் சமீப காலங்களில் அதிக கவனம் பெற்றிருக்கும் முக்கிய ரகம் தான் ‘ஜமுனாபாரி’ ஆடுகள். பாரம்பரியமாக பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிகளில் தோற்றம் பெற்ற இவை, தற்போது இந்தியாவின் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற பகுதிகளில் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்போது தமிழ்நாட்டிலும் முக்கியமாக ஓசூர் பகுதியில் இந்த ரக ஆடுகள் வளர்ப்பில் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

26
அழகிய தோற்றம்
Image Credit : google

அழகிய தோற்றம்

ஜமுனாபாரி ஆடுகள் இயற்கையாகவே அழகிய தோற்றம் கொண்டவை. இதன் காதுகள் நீளமாக ஒரு அடி வரை இருக்கும். பெரிய உடல் அமைப்பும் நீண்ட கால்கள் கொண்டதால் மிகவும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர்கின்றன. ஆண் ஆடுகள் 5 அடி உயரம் வரை வளரும் திறன் பெற்றுள்ளன. பொதுவாக ஒவ்வொரு ஆடும் 80 கிலோ முதல் 140 கிலோ எடை வரை வளரக்கூடியது. இதன் சிறப்பு என்னவென்றால், விரைவாக வளர்ந்து அதிக சதை தரும் தன்மை கொண்டது என்பதே.

Related Articles

Related image1
ஆடு வளர்ப்பு ஏன் அனைவராலும் போற்றிப் புகழப்படுகிறது? இதை வாசிங்க தெரியும்...
Related image2
ஒருங்கிணைந்த பண்ணையில் ஆடு வளர்ப்பது கூடுதல் லாபம் தரும். எப்படி?
36
லாபம் தரும் ஆடு வளர்ப்பு தொழில்
Image Credit : Asianet News

லாபம் தரும் ஆடு வளர்ப்பு தொழில்

ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தேன்கனிக்கோட்டை, பாகலூர் போன்ற பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் சிறப்பு பரண்கள் அமைத்து வித்தியாசமான முறையில் ‘இன்ஷூர்டு’ வளர்ப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். பாசிப்பயறு, துவரை, பால் புண்ணாக்கு போன்ற உணவுகளை அளித்து நல்ல எடையை எட்ட வைப்பதுடன், கால்நடைகளின் தடுப்பு தடைவிதிகளையும் பின்பற்றி, மருத்துவ ஆலோசனை பெறுகிறார்கள்.

46
ரூ. 1லட்சம் வரை விலை போகும்
Image Credit : google

ரூ. 1லட்சம் வரை விலை போகும்

ஒரு குட்டியின் விலை ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை விற்பனை ஆகிறது. நன்கு வளர்ந்த ஆடுகள் ரூ.1 லட்சம் வரை விலை பெறுகின்றன. இதன் கறி வியாபாரம் மிக விரிவாகவும் லாபகரமாகவும் உள்ளது. ஓசூர் மற்றும் கர்நாடக சந்தைகளில் மட்டுமல்ல, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் கூட அதிக விலை கொடுத்து வாங்கப்படுகின்றது. மேலும், மலேசியா, தைவான், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் அரேபிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

56
பாலுக்கும் நல்ல விலை கிடைக்கும்
Image Credit : google

பாலுக்கும் நல்ல விலை கிடைக்கும்

பலரும் இதில் பாலையும் வியாபாரமாக்குகின்றனர். ஒரு ஆடு நாளொன்றுக்கு 2-3 லிட்டர் பால் தரும் திறன் கொண்டது. இதன் பாலில் 5% வரை உயர் புரதச்சத்து உள்ளது. குழந்தைகள், வயதானவர்கள் ஆரோக்கியம் கருதி பாலை விரும்பி வாங்குகின்றனர். மேலும் ஜமுனாபாரி ஆடுகள் ஒரு முறை ஈன்றால் 2 முதல் 3 குட்டிகள் வரை ஈன்று வளர்க்கும் திறன் கொண்டது. அதனால் மிக வேகமாக தடைச் சுழற்சி வளர்ச்சி ஏற்படுகிறது.

66
20 குட்டிகள் போடும் ஆடுகள்
Image Credit : google

20 குட்டிகள் போடும் ஆடுகள்

ஒரு விவசாயி சொல்வதாவது, “நான் 4 ஆடுகளை வாங்கினேன். இரண்டு ஆண்டுகளில் சுமார் 20 குட்டிகள் கிடைத்தன. இதனால் என் குடும்ப வருமானம் உயர்ந்தது. சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. மேலும் ஆடு வளர்ப்புக்கு அரசு மானியம் வழங்கினால் இன்னும் பல விவசாயிகள் ஈடுபட முடியும்.”  ‘ஜமுனாபாரி’ ஆடு வளர்ப்பு குறித்து சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தவும், ஆடுகள் வாங்க மானிய திட்டங்களை அரசு கொண்டு வரவும் தற்போது விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.. இதனால் ஓசூர் பகுதியின் விவசாய பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என்பதில் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆட்டு இறைச்சி
விவசாயம்
விவசாயக் கடன்
விவசாயக் கடன்
வணிகம்
வணிக யோசனை
முதலீடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved