MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • விவசாயம்
  • விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்..! ஒரு லட்சம்.. இலவச மின்சாரம் ரெடி... உடனே விண்ணப்பம் செய்யுங்க...

விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்..! ஒரு லட்சம்.. இலவச மின்சாரம் ரெடி... உடனே விண்ணப்பம் செய்யுங்க...

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், தகுதி வரம்புகள், மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழுமையான வழிகாட்டி. நிலம் வைத்திருப்பவர்கள், இணைந்து விண்ணப்பிப்பவர்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றிய தகவல்களையும் இது கொண்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 30 2025, 10:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விவசாயிகளுக்கான திட்டங்கள்
Image Credit : Asianet News

விவசாயிகளுக்கான திட்டங்கள்

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. அந்த வகையில் விவசாயிகளுகாக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 1980களிலிருந்து நடைமுறையில் உள்ளது. 1983-ல் சிறு விவசாயிகளுக்கு (1 HP வரை) அறிமுகப்படுத்தப்பட்டு, 1989-ல் 5 HP வரை விரிவாக்கப்பட்டது. இது தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் (5 HP பம்ப் செட் மோட்டாருக்கு) இலவசமாக வழங்கப்படுகிறது. 

ஆண்டுதோறும் சுமார் 40,000 முதல் 50,000 புதிய இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி இழப்பீடாக வழங்குகிறது.

25
விவசாயிகள் இலவச மின்சாரம்
Image Credit : Google

விவசாயிகள் இலவச மின்சாரம்

இந்த நிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தருமபுரி மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் 4 ஆண்டுகளில் 13,058 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 12,319 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்தும் வகையில், தருமபுரி, பாலக்கோடு, அரூர் மற்றும் கடத்தூர் ஆகிய கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதார்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண் மற்றும் கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
விவசாயிகள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்துருச்சு! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை இதோ!
Related image2
அரசு பணியில் சேர சூப்பர் சான்ஸ்! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்! எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
35
இலவச மின்சாரம்- தகுதிகள் என்ன.?
Image Credit : Google

இலவச மின்சாரம்- தகுதிகள் என்ன.?

இந்த நிலையில் இலவச விவசாய மின்சாரம் பெற யாருக்கெல்லாம் தகுதி உள்ளது..? விண்ணப்பிப்பது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.

  • விவசாய நிலம் உள்ளவர்கள்: குறைந்தபட்சம் 50 சென்ட் (அரை ஏக்கர்) விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும்.
  • 2020 ஆகஸ்ட் 5-க்கு முன் விண்ணப்பித்தவர்களுக்கு இந்த நிபந்தனை இல்லை; அவர்களின் பழைய விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு இலவச இணைப்பு வழங்கப்படும்.
  • ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து: 50 சென்ட் நிலம் இல்லாதவர்கள் 3-4 பேர் இணைந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் அனைவரின் கையொப்பமும் இருக்க வேண்டும்.
  • ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் போன்ற பிரிவுகளுக்கு மானிய உதவியுடன் இலவச இணைப்பு (எ.கா., ரூ.25,000 வைப்புத்தொகை அரசு செலுத்தும்).
45
விண்ணப்பிப்பது எப்படி.?
Image Credit : our own

விண்ணப்பிப்பது எப்படி.?

ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள TANGEDCO செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது துணை மின் நிலையத்தில் விண்ணப்பப் படிவத்தை பெறவும்.

ஆன்லைனில்: TANGEDCO இணையதளம் (www.tangedco.gov.in) (www.tangedco.gov.in) அல்லது e-Sevai போர்ட்டலில் (www.eservices.tn.gov.in) (www.eservices.tn.gov.in) பதிவு செய்யலாம். "New Service Connection" என தேர்ந்தெடுத்து "Agricultural" வகையைத் தேர்வு செய்யவும்.

55
தேவையான ஆவணங்கள்
Image Credit : our own

தேவையான ஆவணங்கள்

  • நிலப்பட்டா / சிட்டா / அடங்கல் (Land Document).
  • சாதிச் சான்று (Community Certificate), வருமானச் சான்று (Income Certificate - சில சிறப்பு திட்டங்களுக்கு).
  • கிணறு / போர்வெல் ஆவணங்கள் (Well Permit).
  • பம்ப் செட் விவரங்கள் (HP Capacity).

படிவத்தை நிரப்பி, ஆவணங்களுடன் செயற்பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். சாதாரண வரிசையில் விண்ணப்பித்த பின், இலவச திட்டத்திற்கு மாற்ற விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிப்பதும் 30 நாட்களுக்குள் அறிவிப்பு கடிதம் கிடைக்கும். மாவட்ட TANGEDCO அலுவலகம் சரிபார்த்து, இணைப்பு வழங்கும் 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
விவசாயம்
விவசாயக் கடன்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Recommended image2
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!
Recommended image3
Agriculture: ஏக்கருக்கு ரூ.10 லட்சம் லாபம்.! சமவெளி, வறட்சி பகுதிகளிலும் செய்யலாம் அவக்கோடா சாகுபடி.! இது தெரியாம போச்சே.!
Related Stories
Recommended image1
விவசாயிகள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்துருச்சு! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை இதோ!
Recommended image2
அரசு பணியில் சேர சூப்பர் சான்ஸ்! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்! எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved