Asianet News TamilAsianet News Tamil

சவால் விட்டு பெண்ணை தூக்கிச்சென்று திருமணம்... தங்கை கணவரின் தலையை எடுத்து ஆத்திரத்தை தீர்த்த அண்ணனின் பகீர் வாக்குமூலம்..!

சவால் விட்டு என் தங்கையை தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்ததால் நம்பிராஜன் தலையை துண்டித்து கொலை செய்தோம் என கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

young man murder...5 people arrest
Author
Tamil Nadu, First Published Nov 28, 2019, 3:14 PM IST

சவால் விட்டு என் தங்கையை தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்ததால் நம்பிராஜன் தலையை துண்டித்து கொலை செய்தோம் என கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி மாடன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம்(50). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சண்முகத்தாய்(45). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 2-வது மகன் நம்பிராஜன் (21), பால்பண்ணையில் வேலை செய்து வந்தார். இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

young man murder...5 people arrest

இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதிக்கும் (18) நம்பிராஜனுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் வான்மதியின் பெற்றோர், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எதிர்ப்பையும் மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நம்பிராஜன், வான்மதியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் சொந்த ஊரில் இருந்தால் பிரச்சனை ஏற்படும் என்று கருதி நெல்லை டவுன் வயல் தெருவில் ஒரு வாடகை வீட்டில் புதுமண தம்பதி வசித்து வந்தனர், இவர்களுக்கு நம்பிராஜன் தந்தை அருணாச்சலம் பண உதவிகளை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நம்பிராஜன் வீட்டிற்கு அவரது நண்பர் முத்துப்பாண்டி சென்று, மது குடிக்க இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். இருவரும் குறுக்குத்துறை ரயில்வே கேட் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மறைவான இடத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு புதரில் பதுங்கியிருந்த கும்பல், பாய்ந்து வந்து நம்பிராஜனை சரமாரியாக வெட்டியது. 

young man murder...5 people arrest

இதில் அவரது தலை துண்டானது. பின்னர் கொலையை மறைக்க திட்டமிட்டுள்ளனர். நம்பிராஜனின் உடலை ரயில்வே தண்டவாளத்துக்கு வீசி சென்றுவிட்டனர். இதனிடையே, நீண்ட நேரமாகியும் கணவர் வீடு திரும்பாததால் மருமகள் மாமனார் அருணாச்சலத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜனை தேடி வந்தனர். இந்நிலையில், நம்பிராஜன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த கொலை தொடர்பாக வான்மதியின் அண்ணன் செல்லசாமி (26), உறவினர்கள் செல்லத்துரை (24), முருகன் (25) மற்றும் முத்துப்பாண்டியன், விசுவநாதன் ஆகிய 5 பேரை நேற்று பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு அதிர்ச்சிகளை தகவலை வாக்குமூலமாக அளித்தனர். நம்பிராஜன் மற்றும் அவரது நண்பர்கள் தனி குரூப்பாகவும், நாங்கள் தனி குரூப்பாகவும் செயல்பட்டு வந்தோம். இரண்டு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்தது. நம்பிராஜன் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் நம்பிராஜன், என் தங்கை பின்னால் அடிக்கடி சுற்றி வருவதாக தெரியவந்தது. இதனையடுத்து, எனது நண்பர்களுடன் சென்று அவரை எச்சரித்தேன். அப்போது நம்பிராஜன், என் தங்கையை தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்யப்போவதாக சவால் விட்டான். அப்படி நடக்க விடமாட்டேன், அதற்குள் உன் தலையை எடுத்து விடுவேன் என்று பதிலுக்கு நாங்களும் சவால் விட்டோம். ஆனால் நம்பிராஜன் சவால் விட்டப்படி என் தங்கையை கடத்தி சென்று திருமணம் செய்து விட்டான்.

young man murder...5 people arrest

இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் சொன்னபடி திருமணம் செய்ததால், நாங்களும் நம்பிராஜனை கொலை செய்ய திட்டமிட்டோம். இதனையடுத்து திட்டமிட்டு தனியாக வரவழைத்து கொலை செய்தோம். ரயில் விபத்து நடந்தது போல் ஏமாற்றி தப்பிக்க நினைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios