Asianet News TamilAsianet News Tamil

எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி... உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட பரிதாபம்..!

பொள்ளாச்சியில் இன்று அதிகாலையில் கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Wife murder case...husband arrested
Author
Coimbatore, First Published Apr 23, 2021, 4:57 PM IST

பொள்ளாச்சியில் இன்று அதிகாலையில் கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ளது தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் லட்சுராஜ் (36). விவசாயி.  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகசாமி மகள் சரண்யா (26) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு லோகேஷ்(5) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், சரண்யாவுக்கு அவரது உறவுக்கார வாலிபர் ஓம் பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 2 ஆண்டுகளாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து  உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

Wife murder case...husband arrested

இதுகுறித்து லட்சுமராஜூக்கு தெரியவந்ததும் தனது மனைவியையும், சகோதரரையும் கண்டித்தார். இதனால் சிறிது நாட்கள் 2 பேரும் சந்தித்து கொள்ளாமல் இருந்தனர். பின்னர் வழக்கம்போல் இருவரும் சந்தித்து தங்கள் கள்ளக்காதலை தொடர்ந்தனர். இதுபற்றி அறிந்ததும் மீண்டும் லட்சுமராஜ் அவர்களை கண்டித்தார். தனது சகோதரரை தனது வீட்டிற்கு வராதே, தனது மனைவியுடன் பேசுவதை நிறுத்தி கொள் என கூறினார். 

இதேபோல் தனது மனைவியிடமும் வாலிபரை சந்திப்பதை நிறுத்தி கொள் என எச்சரித்தார். ஆனால் அவர்கள் 2 பேருமே அதனை கண்டு கொள்ளாமல் தங்கள் கள்ளக்காதலை தொடர்ந்தனர். இதன் காரணமாக லட்சுமராஜூக்கும், அவரது மனைவிக்கும் இடையே தினமும் வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு கணவன், மனைவி 2 பேரும் உணவு சாப்பிட்டு விட்டு மகனுடன் தூங்க சென்றனர். இன்று அதிகாலை இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது லட்சுமராஜ், மனைவியிடம், தனது சகோதரருடனான கள்ளக்காதலை கைவிடுமாறு கூறினார். அதற்கு சரண்யா எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். 

Wife murder case...husband arrested

இதில் சரண்யாவின் கையில் பலத்த வெட்டு விழுந்தது. கட்டிலில் சரிந்த அவரை கழுத்தை நெரித்து லட்சுமராஜ் கொலை செய்தார். இதனையடுத்து, லட்சுமராஜ் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலை கைவிடாததால் பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios