மனைவிக்கு டார்ச்சர் கொடுத்து கள்ளக்காதலியுடன் கும்மாளம்.. வீடு புகுந்து கணவரை அலேக்கா தூக்கிய போலீஸ்..!
கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாசம்வாரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ராதா. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் அவரை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி கடந்த 6 மாதங்களுக்கு முன் தெருக்கூத்து நாடகங்களில் நடிப்பதற்காக அனந்தப்பூர் மாவட்டம் தனகல்லுக்கு சென்றார். அங்கு நாகர்த்தினம்மா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து, அவரை சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த ராதா, கணவர் மற்றும் நாகரத்தினம்மா மீது மதனப்பள்ளி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது கள்ளக்காதலி நாகரத்தினம்மாவை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.