Asianet News TamilAsianet News Tamil

என்ன அந்த ரூமுக்கு கூட்டிட்டு போயி இதெல்லாம் செஞ்சாரு மா! பாதிரியாரின் பாலியல் அம்பலம்! அலேக்கா தூக்கிய போலீஸ்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த கோணம்பட்டியில் உள்ள தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகள், தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களும் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

sexual harassment case... pastor arrested in trippur
Author
First Published Jan 5, 2023, 10:01 AM IST

பள்ளி மாணவிக்கு ஓயாமல் பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளரான பாதிரியாரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த கோணம்பட்டியில் உள்ள தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகள், தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களும் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காப்பகத்தின் கண்காணிப்பாளராக, பாதிரியார் ஆண்ட்ரூஸ்(46) என்பவர் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க;- ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. கதறிய இளம்பெண்ணை கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்கள்..!

sexual harassment case... pastor arrested in trippur

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு  தேர்வு விடுமுறைக்காக மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அப்போது பொங்கலூர் பகுதியை சேர்ந்த 14 வயதான மாணவி ஒருவர், தன்னுடைய பெற்றோரிடம் பாதிரியார் ஆண்ட்ரூஸ் தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், இது தொடர்பாக வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்ததாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

sexual harassment case... pastor arrested in trippur

இதனை கேட்டுஅதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிரியார் ஆண்ட்ரூஸை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  மைத்துனியை மடக்க நினைத்த தங்கையின் கணவர்.. உல்லாசத்துக்கு வர மறுத்ததால் நடுரோட்டிலே கதறவிட்ட சம்பவம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios