Asianet News TamilAsianet News Tamil

மற்றொரு ஆசிரியர் மீதும் பாலியல் புகார்... பணியிடை நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம்..!

பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூகவலைதளத்தில் வெளியாயின. பத்மா சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து சர்ச்சையில் மற்றொரு பள்ளி சிக்கி இருக்கிறது.  
 

Sexual harassment against another teacher ... School administration fired
Author
Tamil Nadu, First Published May 28, 2021, 10:42 AM IST

பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னை அயனாவரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 Sexual harassment against another teacher ... School administration fired

சென்னை, கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை அளித்ததாக பல முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். ராஜகோபாலன் வருகின்ற 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் புகார் விவகாரத்தில் மாணவிகளின் பாலியல் புகார்கள் குவிந்துவரும் நிலையில், மேலும் 2 சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

Sexual harassment against another teacher ... School administration fired

இந்நிலையில், சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூகவலைதளத்தில் வெளியாயின. பத்மா சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து சர்ச்சையில் மற்றொரு பள்ளி சிக்கி இருக்கிறது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios