"என் அம்மாவோட கள்ளக்காதனனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க,  அதான் இவரோட கள்ளத்தொடர்பில் இருந்தேன் என டீச்சர் ஒருவர் உறவினர் முன்னிலையில் போலீசில் சண்டை போட்டுள்ளார்.  போலீஸ் ஸ்டேஷனில் நடந்த இந்த சம்பவத்தை வெளிநாட்டிலுள்ள கணவனுக்கு நேரில் வீடியோ கால் போட்டு காட்டியதும் அவர் கண்கலங்கி அழுதுள்ளார்.

என் அம்மாவோட கள்ளக்காதனனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க, அதான் இவரோட கள்ளத்தொடர்பில் இருந்தேன் என டீச்சர் ஒருவர் உறவினர் முன்னிலையில் போலீசில் சண்டை போட்டுள்ளார். போலீஸ் ஸ்டேஷனில் நடந்த இந்த சம்பவத்தை வெளிநாட்டிலுள்ள கணவனுக்கு நேரில் வீடியோ கால் போட்டு காட்டியதும் அவர் கண்கலங்கி அழுதுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த புஷ்பா என்ற பெண், நெல்லையில் ஒரு அரசு பள்ளியில் டீச்சராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். 40 வயதாகும் இந்த இந்த டீச்சருக்கு 15 வயசில் 10-வது படிக்கும் பெண் இருக்கிறார்.

இந்நிலையில், டீச்சருக்கு நாகர்கோவிலை சேர்ந்த 29 வயசு இளைஞர் ஒருவர் பழக்கமாகி உள்ளார். இந்த பழக்கம் அடிக்கடி வீட்டுக்கும் வந்து போகும் அளவிற்கு இருந்துள்ளது, கணவன் வெளிநாட்டில் இருந்ததால் துணையின்றி ஏங்கி தவித்த புஷ்பாவுக்கு அந்த இளைஞர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்குள்ளும் அந்த உறவு பற்றி கொண்டது. இருவரும் வீட்டிலேயே உல்லாசம் இருந்து வந்துள்ளனர். தனது பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு வரும் வரை அந்த இளைஞர் வீட்டில் ஜாலியாக இருந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மகள் வீட்டில் இருக்கும்போதே அந்த இளைஞரை வீட்டுக்கு வரழைத்த அந்த டீச்சர், அறைக்குள் கூட்டிக் கொண்டுபோய், உள்பக்கமாக தாழ்ப்பாளும் போட்டு போட்டுக் கொண்டு உல்லாசமாக இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகள், கள்ளக் காதலன், அம்மா இருவரையும் அந்த ரூமுக்குள்ளேயே வைத்து வெளிப்பக்கமாக பூட்டு போட்டுவிட்டு, தனது சொந்தக்கார்களுக்கு போன் போட்டு இந்த மேட்டரை சொல்லியுள்ளார்.

கொஞ்ச நேரத்தில் விரைந்து வந்த சொந்தக்காரர்கள், இளைஞரை பிடித்து கும்மாங்குத்து குத்தியுள்ளார். மேலும் மேலப்பாளையம் போலீசிலும் ஒப்படைத்தனர். அப்போது, போலீசார் விசாரித்ததில் கள்ளக் காதலனுடன் தான் நான் வாழ்வேன், அவர்மீது யாரும் கை வைக்கக்கூடாது, அப்படி செஞ்சீங்க நடக்கறதே வேற என்று டீச்சர் போலீசாரையே மிரட்டியுள்ளார். 

இதை பற்றி போலீசாரிடம் டீச்சர் ஃ ப்ளாஸ்பேக் சொல்லும்போது போலீஸ்டேஷனே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது, அவர் வெளியிட்ட அந்த ராஸ்கஸியம் அவ்வளவு சுவாரஷ்யம் நிறைந்தது. அதில், என் புருஷனுக்கு வயசு 68 ஆகுது. முதல்ல என் அம்மாவுக்கும் என் புருஷனுக்கும் தகாத உறவு இருந்துச்சி... நானே அவங்க ரெண்டு பேசும் உல்லாசம் அனுபவித்ததை பார்த்திருக்கிறேன். இவங்க தகாத உறவுக்கு என்னைக்குமே நீடிக்கணும்னு என்னை, எங்க அம்மா அவருடைய ஆசை காதலனுக்கு அதாவது என் புருஷனை எனக்கு கட்டி வச்சிட்டாங்க. அதனால அவர்கூட வாழவே எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் இந்த இளைஞரை 10 வருஷமா வெச்சிருக்கேன். அதனால அவர் மீது யாரும் கை வைக்ககூடாது, நானும் அவரோட தான் வாழ்வேன் என்றார். 

இதில் கொடுமை என்னன்னா? இங்கு நடந்த விசாரணையை உறவினர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள புஷ்பாவின் கணவருக்கு வீடியோ காலில் போட்டு காட்டியுள்ளார். புஷ்பாவையும் அவரது பெட்ரூம் நாயகனையும் கண்ட வெளிநாட்டு மைனர் குஞ்சு குலுங்கி குலுங்கி அழுதுள்ளார்.