வீடு புகுந்து பள்ளி மாணவி கடத்தல்... இரவு முழுவதும் மிரட்டி உல்லாசம்... வசமாக சிக்கிய இளைஞர்..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள களமருதூர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (21). தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை அவரது வீட்டில் இருந்து கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
கடலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள களமருதூர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (21). தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை அவரது வீட்டில் இருந்து கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மகளை காணவில்லை என்று அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால்இ அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இளைஞரிடம் இருந்து தப்பி வந்த பள்ளி மாணவி தனக்கு நடந்த துயர சம்பவத்தை கூறி பெற்றோரிடம் கதறியுள்ளார். இதைக் கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.