தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்து மூன்று நாட்களான அரசுப் பேருந்து கண்டக்டர் ஒருவருக்கு பொய் சொல்லி சிகிச்சை அளித்து பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமணா பட பாணியில் ஏமாற்றிய மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாகைமாவட்டம்திருக்குவளையை அடுத்த கீழஈசனூரைச் சேர்ந்தவர், சேகர். இவர்அரசுபஸ்கண்டக்டராகநாகைபணிமனையில்வேலைசெய்துவந்தார். வயிற்றுவலியால்அவதிப்பட்டுவந்தஇவர், நாகைவெளிப்பாளையம்பகுதியில்உள்ளஒருதனியார்மருத்துவமனையில்கடந்த 7-ந்தேதியில் இருந்து சிகிச்சைபெற்றுவந்தார்.
இதைத் தொடர்ந்துகடந்த 11 ஆம் தேதி சேகரை மேல்சிகிச்சைக்காகதஞ்சையில்உள்ளஒருதனியார்மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த மருத்துவமனையில் . சிகிச்சைக்காகவும், மருந்துசெலவுக்காகவும்ரூ.5½ லட்சம்வரைசெலவானது.
மேலும் மருத்துவமனைநிர்வாகம்ரூ.2½ லட்சம்பாக்கிஉள்ளதுஎன்றும், அந்ததொகையைஉடனடியாககட்டவேண்டும்என்றும்வற்புறுத்தினர். இதையடுத்துஉறவினர்கள், நண்பர்களிடம்ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம்எனவசூலித்துமொத்தம்ரூ.50 ஆயிரம்ரூபாயை அவரது உறவினர்கள் கட்டியுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்க பணம் இல்லாதால்
நேற்றுமதியம்தஞ்சைமருத்துவக்கல்லூரிமருத்துவமனையில்சேகர்சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளார். அங்குஅவரதுஉடலைபரிசோதித்தடாக்டர்கள்சேகர்இறந்து 3 நாட்களாகிவிட்டதுஎன்றதகவலைதெரிவித்தனர்.
இதனைக்கேட்டுஅவருடையகுடும்பத்தினர்மிகுந்தஅதிர்ச்சிஅடைந்தனர்.இறந்தவரைஉயிருடன்இருப்பதாககூறிபணம்வசூலித்துஅந்ததனியார்மருத்துவமனைதங்களைஏமாற்றிவிட்டதேஎனஅவருடையகுடும்பத்தினர்வேதனைஅடைந்தனர்.
இதுகுறித்துஅந்ததனியார்மருத்துவமனைமீதுநடவடிக்கைஎடுக்கக்கோரிசேகரின்மகன்சுபாஷ், தஞ்சைதெற்குபோலீசில்மாலைபுகார்கொடுத்தார். ரமணா படப் பாணியில் இறந்தவருக்க சிகிச்சை அளித்த தனியார் மருத்துவனை பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
