Asianet News TamilAsianet News Tamil

பட்டப்பகலில் பயங்கரம்... திமுக ஒன்றிய கவுன்சிலர் கொடூரமாக வெட்டிப்படுகொலை..!

ராஜபாளையத்தில் நண்பர் கொலைக்கு பழிக்கு பழியாக ஒரு ஆண்டுக்கு பிறகு திமுக ஒன்றிய கவுன்சிலர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Rajapalayam DMK councilor murder
Author
Virudhunagar, First Published Apr 15, 2021, 1:23 PM IST

ராஜபாளையத்தில் நண்பர் கொலைக்கு பழிக்கு பழியாக ஒரு ஆண்டுக்கு பிறகு திமுக ஒன்றிய கவுன்சிலர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன் (45). 13-வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் அண்ணாமலை ஈஸ்வரன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அண்ணாமலை ஈஸ்வரன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தார்.

Rajapalayam DMK councilor murder

இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சேத்தூர் கரையடி விநாயகர் கோயிலுக்கு அண்ணாமலை ஈஸ்வரன் நேற்று வழிபடச் சென்றார். அப்போது மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே அண்ணாமலை துடிதுடித்து உயிரிழந்தார்.

Rajapalayam DMK councilor murder

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அண்ணாமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios