மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. இந்த மூணு பேரில் யார் வேணும்? வசமாக சிக்கிய கும்பல்.!
கிளப்பில் பல பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாகவும், அங்கு பல இளைஞர்கள் அடிக்கடி பணத்தோடு வந்து செல்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஒரு போலீசாரை மப்டி டிரஸ்ஸில், அந்த மசாஜ் சென்டருக்குள் அனுப்பி வைத்தனர்.
பெருந்துறை அருகே மசாஜ் சென்டரில் ரகசியமாக விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 3 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
விபச்சாரம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தங்கும் விடுதி ஒன்றில் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் சென்டரை திருப்பூரை சேர்ந்த தானேஷ் குமார் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கிளப்பில் பல பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாகவும், அங்கு பல இளைஞர்கள் அடிக்கடி பணத்தோடு வந்து செல்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஒரு போலீசாரை மப்டி டிரஸ்ஸில், அந்த மசாஜ் சென்டருக்குள் அனுப்பி வைத்தனர். அவரிடம் கிளப்பின் மேலாளர் தானேஷ்குமார் என்பவர், இங்கு மசாஜ் செய்வதற்கு ரூ.2 ஆயிரம் வாங்குகிறோம். இதேபோல் உல்லாசமாக இருக்க விரும்புகிறீர்களா? அழகிகள் உள்ளனர். அதற்கு தனியாக ரூ.2 ஆயிரம் தரவேண்டும். பெண்களை தேர்வு செய்கிறீர்களா? என்று 3 பெண்களை அழைத்து, அவரின் முன்னால் நிறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க;- 45 வயதில் இப்படி கூடவா ஆசைவரும்.. கருமம் கருமம்.. மாணவர்களிடம் எல்லை மீறிய ஆசிரியையின் காம லீலைகள்அம்பலம்.!
மேலாளர் கைது
மேலாளர் சொன்னதை கேட்டதும், மாறுவேடத்தில் இருந்த போலீஸ்காரர் என்னிடம் ரூ.2 ஆயிரம்தான் உள்ளது. வெளியே சென்று பணம் கொண்டு வருகிறேன் என்று போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்தவற்றை கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் படைகளுடன் வந்த அதிகாரிகள் மசாஜ் கிளப்புக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
இதையும் படிங்க;- எந்நேரமும் ஆபாச படம்.. டியூசன் வந்த பள்ளி மாணவர்களை கரெக்ட் செய்து ஆசிரியை உல்லாசம்.. வெளியான வீடியோ..!
அப்போது 3 பெண்களை வைத்து அங்கு விபசாரம் நடப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மசாஜ் கிளப் மேலாளர் தானேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த 3 பெண்களையும் மீட்டு கோவையில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.