Asianet News TamilAsianet News Tamil

திண்டுக்கல்லில் தாயுடன் நடந்து சென்ற பெண் கழுத்தை அறுத்து கொலை முயற்சி; கணவன் வெறிச்செயல்

வத்தலகுண்டுவில் குடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் வாழ வராததால் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவனை வத்தலகுண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

one person arrested who try to kill her wife at public place in dindigul district
Author
First Published Aug 22, 2023, 11:31 AM IST

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு  9 வயதில் ஒரு மகனும், ஏழு வயதில் ஒரு மகனும் உள்ளனர். ராமு ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களாக கேரளாவில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். மனைவி விஜயலட்சுமி நிலக்கோட்டையில் கூலி வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு தொடர்ந்து சண்டை வந்துள்ளது. இதனை அடுத்து விஜயலட்சுமி கணவரை பிரிந்து வத்தலகுண்டுவில் உள்ள  தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் விஜயலசுமியும், அவரது தாயாரும் வத்தலகுண்டுவில் உள்ள கடைக்கு சென்று விட்டு காந்தி நகர் பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த ராமு தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி அழைத்துள்ளார். 

கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி; 28 பேர் காயம்

இதனை அடுத்து குடிக்காமல் ஒழுக்கமாக வேலைக்கு சென்று வந்தால் மட்டுமே வாழ வருவதாகவும், இல்லை என்றால் வர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த ராமு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயலட்சுமியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் விஜயலட்சுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Vikram Lander தரையிறங்கப் போகும் சவாலான கடைசி 15 நிமிடங்கள்! நடக்கப்போவது என்ன?

விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்ய முயன்ற ராமுவை வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகில் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios