பெண் ஒருவர் காவலாளி ஒருவரை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நம் நாடு முழுவதிலும் வீடு, தொழிற்சாலை மற்றும் அபார்ட்மெண்ட் என எல்லாவற்றிலும் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள் வாட்ச்மேன் எனப்படும் காவலாளிகள். தவறான நடத்தை, வாய்மொழி மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இவர்கள் பலியாவதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது போன்ற பல சம்பவங்கள் நொய்டா மற்றும் குர்கானில் இருந்து, குறிப்பாக, சமீபத்திய மாதங்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நொய்டாவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் உள்ள அஜ்னாரா சொசைட்டியில் ஒரு பெண் காவலரிடம் தவறாக நடந்து கொள்ளும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..‘முதலில் எருமை, அடுத்து மாடு.. இப்போ அதுவும் போச்சா.! அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரயில்’

இந்த சம்பவத்தை உறுதி செய்து, சென்ட்ரல் நொய்டா காவல்துறை துணை ஆணையர் ட்வீட் செய்துள்ளார்: அதில், ‘நொய்டாவில் உள்ள அஜ்னாரா சொசைட்டியில், சில பெண்கள் காவலரிடம் தவறாக நடந்து கொண்டனர். காவலரின் புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது’ என்று பதிவிட்டார்.

வீடியோவில், ஒரு பெண் காவலாளியின் காலர் அருகே சட்டையைப் பிடித்துக் கொண்டு அவனது தொப்பியை எறிந்துவிடும்படியும், மற்றொரு பெண் அந்தச் சம்பவத்தின் வீடியோ கிளிப்பையும் எடுத்தது அந்த காணொளியில் காணலாம். பிறகு மற்றொரு பாதுகாவலர் தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை பெண்களிடமிருந்து இழுத்துச் செல்கிறார்.

கடந்த மாதம், நொய்டாவில் ஒரு பெண் பாதுகாவலரைத் தாக்கியதற்காகவும், ஆபாசமான சைகைகள் மற்றும் மொழியைப் பயன்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் குந்தவையாக மாறிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.. அதிர்ச்சியில் தெலங்கானா முதல்வர் KCR !