பண மோசடி செய்து ஏமாற்றிய பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் தீக்குளிக்க  முயன்ற பெண்ணை செய்தியாளர் ஒருவர் படம் எடுப்பதைவிட்டு ஓடிப் போய் காப்பாற்றினார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்சௌராஷ்டிரதெருபகுதியைசேர்ந்தவர்ஜான்கென்னடி. இவரதுமனைவிராணி. இவர்களுக்குசோனியாஎன்றமகள்உள்ளார். இவர்கள் மதுரையைசேர்ந்தபாஜகபிரமுகர்ராம்மோகன்என்பவருக்குசொந்தமானவீட்டைகடந்த 2001 ஆம்ஆண்டுஒத்திக்குஎடுத்து வசித்து வருகின்றனர்.

ஒத்தி பணமாக ஜான் கென்னடி ராம் மோகனிடம்  90 ஆயிரம்ரூபாய் கொடுத்துள்ளார். , ஒத்திகாலக்கெடுமுடிந்தும்அதற்கானபணத்தைதிருப்பிகொடுக்காமல்வாடகையைமட்டும்ராம்மோகன்வாங்கிவந்ததாகவும்தெரிகிறது.

இதனிடையே வீடுபழுதடைந்ததால் தாங்கள் வீடு மாற உள்ளதாகவும், ஒத்தி பணத்தை தர வேண்டும் என்றும் ராம் மோகனிடம், ஜான் கென்னடி கேட்டுள்ளார். வீடுபழுதுநீக்குசெலவிற்கேதாங்கள்கொடுத்தபணம்காணாதுஎனகூறிஒத்திபணத்தைகொடுக்காமல்ராம்மோகன் மோசடிசெய்துள்ளார்.

மேலும் , ஜான்கென்னடிகுடும்பத்துடன்சேர்ந்துதன்னைதாக்கியதாக போலீசில் புகார் அளித்துவிட்டு ஆசாரிப்பள்ளம்மருத்துவகல்லூரிமருத்துவமனையில்ராம் மோகன் அட்மிட் ஆகி சிகிச்சைபெற்றுவருகிறார்.

இந்நிலையில் பணத்தைமோசடிசெய்ததோடுகாவல்நிலையத்தில்பொய்புகார்அளித்துதங்களைமிரட்டும்ராம்மோகன்மீதுநடவடிக்கைஎடுக்கவலியுறுத்திநாகர்கோவிலில்உள்ள ஆட்சியர்அலுவலகவளாகத்தில்பெட்ரோல் ஊற்றிஜான் கென்னடியின் மனைவி ராணி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர் சரவணன் ஓடிப்போய் ராணியின் கையில் இருந்த பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டியை பறித்து கீழே எறிந்து காப்பாற்றினார். இதையடுத்து போலீசார் ராணியை கைது செய்தனர்.

சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தீக்குளிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய செய்தியாளர் சரவணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.