விருதுநகர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.

விருதுநகர் அருகேயுள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். . இவர் விருதுநகரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து முடித்துள்ளார். இதே போல் விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் ரஞ்சிதா. இவரும் தனியார் கல்லூரியில்பி.எஸ்சிபடித்து முடித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

நேற்று மாலை விருதுநகர்-சாத்தூர் ரெயில்பாதை பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அந்த வழியாக வந்த ரெயில்முன் இருவரும் பாய்ந்துள்ளனர். இதில் 2 பேரும் உடல் சிதைந்து அதே இடத்தில் இறந்து போனார்கள்.

தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.