கள்ளக்காதலிக்கு பாலியல் தொல்லை... கூலித்தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த ஜோடி கைது..!
கள்ளக்காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் வேலை செய்யும் குமார் என்பவர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் குமார் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக திருமங்கலம் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குமாரின் மார்பில் நகக்கீறல்களும் அவரது கழுத்து நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து கட்டுமான மேற்பார்வையாளர் உள்பட 6 கூலித்தொழிலாளர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், கூலித்தொழிலாளியான ராஜா(28), சாந்தி (29) என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதற்கிடையே சாந்திக்கு குமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சாந்தியும் ராஜாவும் சேர்ந்து சம்பவத்தன்று குமாரின் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று கள்ளக்காதலர்களான ராஜா மற்றும் சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.