Asianet News TamilAsianet News Tamil

நைட் டூட்டியில் பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்த மன்மத சப்- இன்ஸ்பெக்டர்… கள்ளக்காதலியுடன் ஓட்டம்… பகீர் திருப்பம் !!

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் நைட் டுட்டியில் இருந்த பெண் போலீசை வலுக்கடாயமாக முத்தமிட்ட வழக்கில் தேடப்படும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனக்கு பழக்கமான வேறொரு பெண்ணுடன்  ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவரை போலீசார் தீவிரமான தேடி வருகின்றனர்.

kiss sub inspector run away with his illegal partner
Author
Trichy, First Published Dec 22, 2018, 6:32 AM IST

திருச்சி அருகே சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 10-ந்தேதி இரவு, அங்கு பணியில் இருந்த 32 வயது பெண் போலீசை, அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வலுக்கடாயமாக கட்டி  அணைத்து முத்தமிட்டார். இது தொடர்பாக பெண் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில், பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார்.

போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு முத்தமிட்ட காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அது வாட்ஸ்அப் மற்றும் வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி, சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனிடம் விசாரித்த விவரம் ஆகியவற்றை அறிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்கிடம் தாக்கல் செய்தார்.

kiss sub inspector run away with his illegal partner

இதற்கிடையே பெண் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் 3 பிரிவுகளின்கீழ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மீது சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட பெண் போலீசிடமும் அன்றைய தினம் நடந்தது என்ன? என்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுவதை அறிந்த பாலசுப்பிரமணியன் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக வக்கீல் ஒருவர் மூலம் முன்ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தலைமறைவான சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உய்யகொண்டான் திருமலை அருகே உள்ள கொடாப்பு ஆகும். அவருக்கு மனைவி, மகள், மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அதே ஊரைச்சேர்ந்த திருமணம் ஆன 37 வயது பெண்ணுடன் பாலசுப்பிரமணியனுக்கு  ஏற்கனேவே கள்ளக் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

kiss sub inspector run away with his illegal partner

இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர்  பாலசுப்பிரமணியன் தனது கள்ளக் காதலியுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் இருவரும் ராஜபாளையம் அருகே ஒரு தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  சோமரசம்பேட்டை போலீசார் ராஜபாளையம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios