Asianet News TamilAsianet News Tamil

கட்டுணவனை விட்டுட்டு அடுத்தவன் கூட போனா இப்படி தான் நடக்கும்.. கள்ளக்காதலனால் கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்

குளிர்பானம் வாங்கி அதில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

illegal love... women murder
Author
Thiruvallur, First Published Mar 7, 2021, 7:21 PM IST

குளிர்பானம் வாங்கி அதில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மொன்னவேடு கிராமத்தை சேர்ந்தவர் காத்திக். இவரின் மனைவி பிரியங்கா(24). இருவருக்கும் திருவலங்காடு ஒன்றியம். நார்த்தவாடா கிராமத்தை சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் ராஜ்குமார் (28) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் பிரியங்கா கணவரிடம் சண்டை போட்டுவிட்டு திருவாலங்காடு அடுத்த பழையனூரில் உள்ள தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியேறினார்.

illegal love... women murder

ஆனால், தோழி வீட்டுக்கு செல்லாமல் நார்த்தவாடா பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து ராஜ்குமாருடன் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், பிரியங்கா மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவருடன் ராஜ்குமார் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். தேவையின்றி பிரச்சனைகள் கொடுத்துள்ளார். இதனால், நேற்று முன்தினம் பிரியங்கா வெங்கலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை ராஜ்குமார் வெங்கலுக்கு சென்ற பிரியங்காவை சமாதானப்படுத்தி நார்த்தவாடாவில் உள்ள வாடகை வீட்டிற்கு மீண்டும் அழைத்துவந்து குடும்பம் நடத்தியதாக தெரிகிறது. 

இந்நிலையில், நேற்று அருகில் உள்ள கடைக்கு சென்ற ராஜ்குமார் குளிர்பானம் வாங்கி அதில் பூச்சி மருந்து கலந்து கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதன்பின்னர், பிரியங்காவின் கைகளை துணியால் கட்டி அவரது வாயில் ஊற்றியுள்ளனர். இதில் பிரியங்கா மயங்கி விழுந்ததும் ராஜ்குமார், பிரியங்காவின்  தோழிக்கு போன் செய்து பிரியங்கா விஷம் குடித்துவிட்டார் என்று அழுசதுபோல் நடித்துள்ளார். 

illegal love... women murder

இதனையடுத்து, பிரியங்காவின் தோழி சம்பவ இடத்துக்கு வந்து உடனே பிரியங்காவை சிகிச்சைக்காக திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரியங்கா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார்ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios