Asianet News TamilAsianet News Tamil

மனைவியின் கள்ளக்காதலை கணவருக்கு போட்டுக்கொடுத்த நண்பர்கள்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை..!

கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால் இளம்பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டுதற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

illegal love...woman commits suicide
Author
Ramanathapuram, First Published May 11, 2021, 5:00 PM IST

கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால் இளம்பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டுதற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (33). ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேஷ்மா (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும், 10 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளன. 

illegal love...woman commits suicide

இந்நிலையில் ரேஷ்மாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தென்னரசு என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தென்னரசு, ரேஷ்மாவை அடிக்கடி சந்தித்து சென்றுள்ளார். இதுதொடர்பாக முத்துக்குமார், பாலமுருகன், ஆகியோர் விமல்ராஜிடம் கூறியுள்ளனர். மதுபோதையில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற விமல்ராஜ் தனது மனைவி ரேஷ்மாவை கடுமையாக அடித்து உதைத்து கண்டித்துள்ளார். 

illegal love...woman commits suicide

இதைதொடர்ந்து ரேஷ்மா, தன்னை பற்றி கணவரிடம் அவதூறாக ஏன் கூறினீர்கள்? என முத்துக்குமார், பாலமுருகன், ஆகியோரிடம் செல்போனில் பேசி திட்டியுள்ளார். அதற்கு அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த ரேஷ்மா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே குழந்தைகளின் கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது ரேஷ்மா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரேஷ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 

illegal love...woman commits suicide

பின்னர், வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது ரேஷ்மா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், “எனது சாவுக்கு பாலமுருகன், முத்துக்குமார் ஆகியோர்தான் காரணம் என எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே பாலமுருகன், முத்துக்குமார் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள்,, “ரேஷ்மா எங்களிடம் போனில் பேசி, உங்களால்தான் எனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. எனவே எனது சாவுக்கு நீங்கள் 2 பேரும்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வேன் என தெரிவித்தார். நாங்கள் அப்போது இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios