Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்காதல் விவகாரம்.. கணவனை துடிக்க துடிக்க கொலை செய்து நாடகமாடிய மனைவி.. கூட இருந்தே குழி பறித்த நண்பர்..!

பூவிருந்தவல்லி அருகே கணவனை கொலை செய்துவிட்டு கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

illegal love...husband murder..wife arrest
Author
Chennai, First Published Jul 27, 2020, 3:12 PM IST

பூவிருந்தவல்லி அருகே கணவனை கொலை செய்துவிட்டு கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன்(39). கார் ஓட்டுநர். இவரின் மனைவி பவானி (31). இவர்களுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 22ம் தேதி தரணிதரன், கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

illegal love...husband murder..wife arrest

இதனையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கையில் தரணிதரன் கழுத்து இறுக்கப்பட்டு இறந்ததாக அறிக்கையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும்,  பவானியின் செல்போனுக்கு அடிக்கடி ஒருவரிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பும் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. 

பின்னர், பவானியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், தரணிதரனின் நண்பனான தினேஷ், அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இருவரும் ஓட்டுநர்கள் என்பதால் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. மனைவியை பிரிந்து வாழ்ந்த தினேஷூக்கு, நண்பனின மனைவியான பவானி மீது காதல் ஏற்பட்டுள்ளது. கணவர் இல்லாத சமையத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

illegal love...husband murder..wife arrest

இந்நிலையில், இருவரும் நெருங்கிப் பழக இடையூறாக இருந்துள்ளார் தரணிதரன். கள்ளக்காதல் கண்ணை மறைக்கவே, கணவனை தீர்த்துக் கட்ட மனைவி பவானி முடிவெடுத்தார்.  கடந்த 21ம் தேதி பூச்சி மருந்து வாங்கி வந்து அதை உணவில் கலந்து தரணிதரனுக்கு கொடுக்குமாறு தினேஷ் கூறியுள்ளார். கள்ளக்காதலனின் வார்த்தையை ஏற்று பவானியும்  அதை செய்யவே, பூச்சி மருந்து பலன் அளிக்காமல்,  அடுத்த நாள் அதிகாலை எழுந்து காபியையும் குடித்துவிட்டு அரைத் தூக்கத்தில் இருந்துள்ளார் தரணிதரன். இதனால் அதிர்ச்சியடைந்த பவானி, தன் காதலன் தினேஷை வரவழைத்தார். 

illegal love...husband murder..wife arrest

இருவரும் சேர்ந்து தரணிதரனின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்து துடிக்க துடிக்க கொன்றுள்ளனர். பின்னர் கணவரே தற்கொலை செய்து கொண்டது போல செட்டப் செய்துவிட்டு வழக்கம் போல தங்கள் நாடகத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். நடந்த இந்த தகவல்களை எல்லாம் போலீசாரிடம் பவானி சொல்லவே, அவர்களே அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பவானி, அவரின் காதலன் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios