பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொடூர கொலை.... குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த பரபரப்பு சிசிடிவி பதிவு..!
பிரேத பரிசோதனை அறிக்கையில் அப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, துப்பட்டாவால் அவர் கழுத்தை நெறித்து கொன்று பின் எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. பெண் மருத்துவரின் தங்கை அளித்த தகவலின் அடிப்படையில், ஷாத்நகரில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் ஆய்வு செய்தனர்.
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவர், நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர். பின்னர், அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அந்த பெண், தன் தங்கையிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்பெண்ணின் தங்கை அருகிலுள்ள டோல்கேட்டுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
சில நிமிடங்கள் கழித்து அக்காவை தொடர்பு கொள்ள முயன்ற போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து மருத்துவரைத் தேடி வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள மேம்பாலத்திற்குக் கீழே எரிந்த நிலையில் அப்பெண் உடல் இருந்தது. இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தை உலுக்கியது. இதனையடுத்து, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, துப்பட்டாவால் அவர் கழுத்தை நெறித்து கொன்று பின் எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. பெண் மருத்துவரின் தங்கை அளித்த தகவலின் அடிப்படையில், ஷாத்நகரில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் ஆய்வு செய்தனர். இதில், பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த லாரி ஓட்டுநர், கிளினர் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.