Asianet News TamilAsianet News Tamil

கல்யாணம் ஆன 20 நாளில் கள்ளக் காதலனை வைத்து கணவனை போட்டுத் தள்ளிய இளம் பெண்.. கடற்கரையில் தாக்கப்பட்ட கணவன் உயிரிழப்பு !!

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் மனைவியின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினியர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

husband murder by his wife and his lover
Author
Chennai, First Published Oct 16, 2018, 8:44 AM IST

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கதிரவன். இன்ஜினியரான இவருக்கும் அனிதா என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. புதுமண தம்பதியர் நேற்று முன்தினம் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்த போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கதிரவனை தலையில் இரும்பு கம்பியால் தாக்கினர்.

அவர் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில் அனிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் செயின் மற்றும் செல்போனை பறித்துகொண்டு தப்பி ஓடினர்.இதையடுத்து கதிரவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

husband murder by his wife and his lover

இதுதொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்துக்கு திட்டம் தீட்டியது கதிரவனின் மனைவி அனிதா என்பது தெரியவந்தது.  அவரிடம் நடத்திய விசாரணையில், தன் கள்ளக் காதலன் ஜெகன் என்பவர்  மூலம் கணவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார்.

husband murder by his wife and his lover

திருமணத்துக்கு முன்பே ஜெகனுக்கும், அனிதாவுக்கும் இடையே  காதல் இருந்து வந்தது. இதை அறிந்த அனிதாவின் பெற்றோர் அவசர, அவசரமாக அனிதாவுக்கும், கதிரவனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். ஆனால் ஜெகனை மறக்க முடியாத அனிதா, தனது கள்ளத் காதலனை தொடர்பு கொண்டு கதரிவனை தீர்த்துக் கட்ட பிளான் போட்டுள்ளனர். ஆனால் சிசிடிவி கேமரா இந்த கொலையை காட்டிக் கொடுத்துவிட்டது.

இதனையடுத்து அனிதாவை போலீசார் கைது செய்தனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கள்ளக் காதலன் ஜெகனையும் போலீசார் கைது செய்தனர்.

husband murder by his wife and his lover

இதனிடையே அனிதாவின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கதிரவன் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios