Asianet News TamilAsianet News Tamil

ரத்த வெள்ளத்தில் கிடந்த காதல் மனைவி.. கண்ணெதிரே தூக்கில் தொங்கிய கணவர்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரம்பூர் சித்தி விநாயகர் நகரை சேர்ந்தவர் தம்புசாமி மகன் அறிவழகன் (50). இவர் ஏற்கனவே திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்துள்ளார். பின்னர் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா என்கிற ஜெரினா பீவி (45) என்பவரை அறிவழகன் இரண்டாவதாக காதல் திருமணம் செய்து கொண்டார். 

husband commits suicide by cutting his love wife in Mayiladuthurai
Author
First Published Aug 30, 2022, 3:43 PM IST

மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரம்பூர் சித்தி விநாயகர் நகரை சேர்ந்தவர் தம்புசாமி மகன் அறிவழகன் (50). இவர் ஏற்கனவே திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்துள்ளார். பின்னர் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா என்கிற ஜெரினா பீவி (45) என்பவரை அறிவழகன் இரண்டாவதாக காதல் திருமணம் செய்து கொண்டார். 

இதையும் படிங்க;- இளம்பெண்ணுக்கு அந்த இடத்தில் கை வைத்து டார்ச்சர்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன்! டாக்டர் மிரட்டல்

husband commits suicide by cutting his love wife in Mayiladuthurai

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணியாற்றிய இவர் கடந்த ஒரு ஆண்டாக ஊரிலேயே தங்கியுள்ளார். இத்தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததை அடுத்து, அறிவழகனின் உறவினர்கள் கதவை உடைத்து அறிவழகனின் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது  ஜெரினா பீவி வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதையும், அறிவழகன் தூக்கில் தொங்கியபடி இறந்திருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

husband commits suicide by cutting his love wife in Mayiladuthurai

பின்னர், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெரினா பீவியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த அறிவழகனின் உடலை கைப்பற்றி உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடந்து வந்த விபச்சாரம்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா? கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios