மோட்டார் ரூமில் முனங்கல் சத்தம்.. எட்டி பார்த்த மூதாட்டியை கொடூரமாக கொன்ற கள்ளக்காதல் ஜோடி..!
மோட்டார் ரூமில் கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருப்பதை பார்த்த மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார் ரூமில் கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருப்பதை பார்த்த மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி காளி முத்தம்மாள் (92). சில வருடங்களுக்கு முன்பு கணவர் உயிரிழந்துவிட்டார். இவர்களது 2 மகன்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மூதாட்டி தனது வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்புக்கு தினமும் சென்று வருவது வழக்கம். நேற்று காலை வீட்டிலிருந்து தென்னந் தோப்புக்கு மூதாட்டி காளிமுத்தம்மாள் சென்றார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டியை மோட்டார் ரூமுக்குள் கொண்டு சென்று கொலை செய்து விட்டு காதில் இருந்த தோடை எடுக்க முடியாததால் காதை அறுத்து தோடை எடுத்து சென்றனர். மேலும் கையில் அணிந்திருந்த வளையல்களையும் எடுத்துக்கொண்டு மொத்தம் 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூதாட்டியில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் வடிவேலு என்பவரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
மூதாட்டியின் தென்னந்தோப்பில் 10 நாட்களுக்கு முன்பு வரை வேலை செய்து வந்த பாண்டியூரை சேர்ந்த முத்துராக்கு (28) என்பவருக்கும் வடிவேலுவுக்கும் ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. முத்துராக்கு தோப்பில் வேலை செய்யும்போது வடிவேலு தோப்வுக்கு வந்து மோட்டார் ரூமில் இருவரும் உல்லாசமாக இருப்பார்கள். இதனை அறிந்த மூதாட்டி முத்துராக்குவை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேலு நேற்று தனியாக இருந்த மூதாட்டியிடம் எங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து விட்டாய். நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். உனது நகைகளை என்னிடம் கொடு என்று கேட்டார். மூதாட்டி மறுக்கவே, அவரை அடித்து நகைகளை பிடுங்கிக் கொண்டு கொலை செய்து விட்டு வடிவேலு தப்பி விட்டார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியபோது நகைகளை முத்துராக்கு வீட்டில் வைத்திருப்பதாக கூறினார். அதன்பின் முத்துராக்குவின் வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை செய்து நகையை கைப்பற்றினர். இதனையடுத்த, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.