தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த மாணவர்கள் !! ரயில் மோதியதில் 4 பேர் பரிதாப பலி !!
கோயம்புத்தூரை அடுத்த சூலூர் பகுதியில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த மாணவர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தனியார் பொறியில் கல்லூரியில் கொடைக்கானலைச் சித்திக் ராஜா, நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் ராஜபாளையம் கவுதம், கருப்பசாமி ஆகிய 4 பேரும் படித்து வந்தனர்.
நண்பர்களான இவர்கள் இருகூர் அருகே ராவுத்தர் பாளையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து நேற்றிரவு மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆழப்புழா -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே மாணவர்கள் 4 பேரும் பலியாயினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.