Asianet News TamilAsianet News Tamil

பட்டப்பகலில் வீட்டின் மீது வெடிகுண்டு வீசி தம்பதி ஓட ஓட விரட்டி படுகொலை...!

திண்டுக்கல் அருகே கணவன் மனைவியை நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது. பட்டப்பகலில் நடந்த இரட்டைக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

couple murder
Author
Tamil Nadu, First Published Mar 11, 2019, 1:25 PM IST

திண்டுக்கல் அருகே கணவன் மனைவியை நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது. பட்டப்பகலில் நடந்த இரட்டைக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி - பஞ்சவர்ணம் தம்பதியின் மகன்களான அஷோக்குமார், சேகர் ஆகியோர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் நல்லாம்பட்டியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.காலை சகோதரர்கள் இருவரும் வெளியே சென்றிருந்த நிலையில், பாண்டி - பஞ்சவர்ணம் தம்பதியர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். couple murder

இதனையடுத்து வெளியே ஓடிவந்து பார்த்த போது அந்த மர்ம கும்பல் அவர்களை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். couple murder

கொலை வழக்கில் விசாரணையில் இருக்கும் அவர்களது மகன்கள் மீதான முன்விரோதத்தால் இந்தக் கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இரட்டைக்கொலை சம்பவத்தில் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios