Asianet News TamilAsianet News Tamil

பல ஆண் நண்பர்களுடன் தொடர்பு... தட்டிக்கேட்ட 2 வது புருஷன் மீது கொடுமை படுத்துவதாக நாடகம் போடும் நடிகை..!

ராதா அவரது பழைய நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை கண்டித்தேன். ஆனால், அதற்கு ராதா முறையாக பதில் அளிக்கவில்லை. 

Contact with many male friends ... Actress who pretends to be cruel to the 2nd husband who was kidnapped
Author
Tamil Nadu, First Published Apr 15, 2021, 5:58 PM IST

பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். சென்னையில் வசித்து வரும் நடிகை ராதா, கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் இரண்டாவதாக தன்னை திருமணம் செய்த கணவர் அடித்து கொடுமை செய்வதாக பரபரப்பு புகாரை அளித்திருந்தார் நடிகை ராதா. இதுகுறித்து காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்த வசந்தராஜ், நடிகை ராதாவின் பின்னணி குறித்து பரபரப்பாக குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார். Contact with many male friends ... Actress who pretends to be cruel to the 2nd husband who was kidnapped

’’திருவான்மியூரில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பொழுது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு திருமணம் ஆனது ராதாவிற்கு தெரியும். ராதாவுடன் நெருங்கி பழகுவதற்காக திருவான்மியூரில் இருந்து வடபழனி காவல் நிலையத்திற்கு உதவி ஆய்வாளராக பணியிட மாறுதல் பெற்று கொண்டு வந்தேன். அங்கிருந்து பணியிட மாற்றம் ஏற்பட்ட பின்னும் தொடர்ந்து ராதாவுடன் சாலிகிராமத்தில் வசித்து வந்தேன். 

இந்த நிலையில் ராதாவுடன் இல்லத்தில் இருந்தபோது ராதா என்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறினார். அதற்கு முதல் திருமணம் முறையாக விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்ய முடியாது எனக்கூறினேன். இதனால் ஆத்திரமடைந்த ராதா ’ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், சட்ட ரீதியாக பிரச்சினைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’என கூறினார்.

Contact with many male friends ... Actress who pretends to be cruel to the 2nd husband who was kidnapped

அவரது வற்புறுத்தலின் பேரில் அவரது வீட்டில் திருமணம் செய்து கொண்டேன். அதன்பிறகு ராதா அவரது பழைய நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை கண்டித்தேன். ஆனால், அதற்கு ராதா முறையாக பதில் அளிக்கவில்லை. குறிப்பாக ஏற்கனவே தொடர்பில் இருந்த தொழிலதிபர் பைசல் மற்றும் கோடம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்ளிட்ட பல ஆண் நண்பர்களிடம் தற்போது வரை தொடர்பில் இருக்கிறார். அந்த தொடர்புகளை துண்டிக்க சொன்னபோது ராதா மறுத்து விட்டார். 

என்னுடைய முதல் திருமணத்தை முறையாக விவாகரத்து செய்யாத நிலையில் தனது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எனக்கு தெரியாமல் எடுத்து ராதா தனது கணவர் வசந்தராஜ் என அவரது ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் பெயரை மாற்றிக் கொண்டார். அவ்வாறு பெயர் மாற்றப்பட்ட ஆவணங்களை வைத்து என்னிடம் தெரிவிக்காமல் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஒன்றை அண்மையில் ராதா வாங்கி உள்ளார். இதேபோல என்னிடம் இருந்து பலமுறை பணத்தை பெற்றுக் கொண்ட ராதா தொடர்ந்து என்னை ஏமாற்றி வந்ததார்’ எனத் தெரிவித்துள்ளார்.Contact with many male friends ... Actress who pretends to be cruel to the 2nd husband who was kidnapped

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடிகை ராதா தொழிலதிபர் ஃபைசல், அதிமுக பிரமுகர் உள்ளிட்டவர்கள் மீது புகார் அளித்தும் ராதா மீது பைசுல் தரப்பிலிருந்தும் அதிமுக பிரமுகர் தரப்பிலிருந்தும் பல்வேறு காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட உதவி ஆய்வாளர் துன்புறுத்துவதாக நடிகை ராதா புகார் அளித்திருப்பது மீண்டும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios