ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. கள்ளக்காதலியுடன் உல்லாசம்..அவரது மகளையும் விட்டு வைக்காத தொழிலதிபர் மகன்..!
சென்னையில் கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய ரியல் எஸ்டேட் அதிபரின் மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையில் கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய ரியல் எஸ்டேட் அதிபரின் மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை ஆவடியை அடுத்த சேர்க்காடு பள்ளத்தெருவை சேர்ந்தவர் அஸ்வின்(26). இவரின் தந்தை பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் அஸ்வினுக்கும் அதே பகுதியை திருமணமான ஒரு பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருப்பதால் இருவருக்கும் ஏறு்பட்ட நெருக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணுக்கு 13 வயதில் மகள் உள்ளார்.
அஸ்வின் அடிக்கடி கள்ளக்காதலி வீட்டுக்கு வந்து செல்லும்போது பெண்ணின் மகளிடமும் நெருக்கமாக பழகியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண்ணின் மகளையும் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர் பரிசோதித்தார். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியதையடுத்து சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஸ்வினை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணையும், அவரது மகளையும் தொழிலதிபர் மகன் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.