அப்போது அந்த பெண்ணை பின்தொடர்ந்த  ஒரு நபர் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரின் வாயை பொத்தி காட்டுக்குள் தனியாக உள்ள தனது வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளார்

இளம் பெண்ணை பின்தொடர்ந்து சென்று அவரை கடத்தி காட்டிற்குள் தனியாக உள்ள தனது வீட்டில் அடைத்து வைத்து இளைஞர் ஒருவர் ஆசைதீர அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறுநீர் கழிக்க வயல் வெளி பக்கம் சென்றுள்ளார் . அப்போது அந்த பெண்ணை பின்தொடர்ந்த ஒரு நபர் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரின் வாயை பொத்தி காட்டுக்குள் தனியாக உள்ள தனது வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளார் .

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின்னர் தனது வீட்டில் இரண்டு நாட்கள் அந்த பெண்ணை அடைத்து வைத்த அந்த நபர் அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி , தனக்கு தேவைப்படும் போதெல்லாம் அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார் . அந்தப் பெண் கத்தி கதறியும் அந்த வீடு ஊருக்கு வெளிப்புறத்தில் இருப்பதால் அந்தப் பெண்ணின் கதறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை . இந்நிலையில் வெளியில் சென்ற தன் மகளை இரண்டு நாட்களாக தேடியும் எங்கும் காணவில்லையே என்று பதற்றமடைந்த அவரது பெற்றோர்கள் . மகள் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . புகார் அளித்துவிட்டு வீடு திரும்பும்போது எதிரில் வந்த ஒரு நபர் , 

உங்கள் மகள் என்னுடைய வீட்டில் தான் இருக்கிறாள் எனக்கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் . இதில் அதிர்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் போலீசார் உதவியுடன் அந்த நபரின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அந்த பெண் மயக்க நிலையில் நிர்வாண கோலத்தில் கிடந்தார் , உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . அதனை அடுத்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த காமக்கொடூரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .