பெற்ற மகனைக் கொன்ற இளைஞர் ஒருவரை 9 மாதங்கள் காத்திருந்து அவர் ஜாமீனில் வெளி வந்ததும் சினிமா பாணியில் கூலிப்படை உதவியுடன் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
சென்னைநெசப்பாக்கத்தைச்சேர்ந்தவர் தொழிலதிபர்கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ரித்தேஷ்சாய்என்ற 10 வயது மகன் இருந்தான். மஞ்சுளா . சென்னையில்உள்ளமின்வாரியஅலுவலகத்தில்வேலை பார்த்தார். இந்த குடும்பத்தினருடன்நாகராஜ்என்பவர்நல்ல நண்பர்போலபழகிவந்துள்ளார்.

இதனிடையே நாகராஜும்மஞ்சுளாவும்நெருங்கிப்பழகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன்அவர்களை கண்டித்தார். இதனால்ஆத்திரமடைந்தநாகராஜ், ரித்தேஷ்சாயைகடத்திச்சென்றுசேலையூரில்உள்ளஅடுக்குமாடிகுடியிருப்பில்வைத்துஅடித்துக்கொலைசெய்தார். இந்தவழக்கில்நாகராஜைபோலீஸார்கைதுசெய்துசிறையில்அடைத்தனர்.

மிகப் பரபரப்பக பேசப்பட்ட இந்த வழக்கில் கடந்த 9 மாதங்களாகச்சிறையில்இருந்தநாகராஜ்கடந்தவாரம்ஜாமீனில்வெளியேவந்தார். பின்னர், அவர்திருவண்ணாமலையில் உள்ள செல்போன்கடையில்வேலைக்குச்சேர்ந்தார்.
இந்நிலையில்தான் நாகராஜ் கடந்த 29 ஆம் தேதி கண்டம், துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தக்கொலைதொடர்பாகத்திருவண்ணாமலைடவுன்போலீஸார்விசாரணைநடத்தினர். விசாரணையில்திடுக்கிடும்தகவல்கள்வெளியாகின.

அதில் ரித்தேஷ் சாய்கொலைசெய்யப்பட்டபிறகுகணவர்கார்த்திகேயனைவிட்டுப்பிரிந்தமஞ்சுளா, சைதாப்பேட்டையில்உள்ளஉறவினர்வீட்டில்தங்கியிருந்தார். தன்னிடம் நல்லவன் போல் பழகி தனது பெயரைக் கெடுத்தது மட்டுமல்லாமல், அன்பு மகனையும் கொன்று விட்டானே என மஞ்சுளா உள்ளத்தில் பழி வாங்கும் எண்ணம் மேலோங்கியது.
இதையடுத்து நாகராஜனை கொலை செய்ய மஞ்சுளா திட்டம் தீட்டினார். இதற்காக தனது நண்பர்களிடம் துப்பாக்கி வாங்கி வர சொன்னார். ஆனால் அவர்கள் மஞ்சுளாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பொம்மைத் துப்பாக்கியை வாங்கித் தந்து விட்டனர்.

இந்தச்சம்பவத்தில்மஞ்சுளாமற்றும்அவரின்நண்பர்களைசைதாப்பேட்டைபோலீஸார்கைதுசெய்தனர். அப்போதுமஞ்சுளாவிடம்போலீஸார்விசாரித்தபோதுஎன்மகனைக்கொலைசெய்தநாகராஜைபழிவாங்காமல்விடமாட்டேன்என்றுகூறியுள்ளார்.
தற்போது இந்தச்சபதத்தை 9 மாதங்களுக்குப்பிறகுநாகராஜ் ஜாமீனில்வெளியில்வந்தும் அவரை கூலிப்படை உதவியுடன் மஞ்சுளா கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து தனது சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.
