அமெரிக்காவில் மருமகளைக் கொன்றதற்காக 74 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 74 வயதான இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஒருவர், தனது மகனை விவாகரத்து செய்ய திட்டமிட்டதற்காக தனது மருமகளை வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிடல் சிங் டோசன்ஜ் தனது மருமகள் குர்ப்ரீத் கவுர் தோசாஞ்ஜை அவர் பணிபுரிந்த வால்மார்ட்டின் தெற்கு சான் ஜோஸ் வாகன நிறுத்துமிடத்தில் கடந்த வாரம் கொன்றதாக ஈஸ்ட் பே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக போலீஸராகே அறிவிக்கப்பட்டது. இதுபற்றி கூறிய காவல்துறை, ‘குர்ப்ரீத்தின் மாமா தனது மருமகள் சந்தேக நபரின் மகனை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார்.

இதையும் படிங்க..ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !

குர்ப்ரீத் சான் ஜோஸில் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மறுநாள் காலை, சிடல் ஃப்ரெஸ்னோவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் மாமனார். சான்டா கிளாரா கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் புதன்கிழமை தாக்கல் செய்த கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய போலீஸ் விசாரணை சுருக்கத்தின்படி, குடியிருப்பில் சோதனையின் போது, ​​22-கலிபர் பெரெட்டா என்ற பிஸ்டலைக் கைப்பற்றினர்.

பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கில்ராயில் உள்ள லைசென்ஸ் பிளேட் ரீடிங் கேமராக்கள், பேச்சிகோ பாஸில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சிடல் டோசன்ஜின் செல்போன் பதிவுகள் ஆகியவை அடுத்த சில மணிநேரங்களில் ஃப்ரெஸ்னோவுக்குத் திரும்பிச் சென்றதையும் கண்டுபிடித்துள்ளனர் போலீசார்.

இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !