Asianet News TamilAsianet News Tamil

இந்திய கப்பற்படை ரகசியங்கள் கசிந்தன...!! பாகிஸ்தானுக்கு உளவு சென்ன 7 மாலுமிகள் கைது..!!

பகிர்ந்துள்ள  ரகசியங்கள் கடற்படையின் கிழக்கு பிராந்தியம் தொடர்பானது என்பதால் விசாகப்பட்டினம் கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகம் மட்டுமல்லாது அணுசக்தியால் இயங்கும் ஹரிஹந்த்  என்ற நீர்மூழ்கி கப்பலின் கட்டுமான தளமும் ஆகும். 

7 navy ca-menders  arrest by Andhra police for  leak our secret to Pakistan  agency
Author
Andhra Pradesh, First Published Dec 22, 2019, 1:38 PM IST

இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானியர்களுடன் பகிர்ந்து கொண்ட குற்றத்துக்காக  இந்திய கடற்படையை சேர்ந்த 7 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்,  இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஏற்கனவே  நாட்டின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான்,  சீனா உள்ளிட்ட நாடுகளால் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில்  இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் இந்திய கடற்படையில் சேர்ந்தவர்களே ரகசிய தகவல்களை   பாகிஸ்தானியர்களுடன் பகிர்ந்திருப்பது   மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

7 navy ca-menders  arrest by Andhra police for  leak our secret to Pakistan  agency

இது குறித்து தெரிவித்துள்ள ஆந்திர டிஜிபி கவுதம் ,  சமூக வலைதளங்களில் சிலருடன் ஏற்பட்ட நட்பின்  காரணமாக அவர்களின்  பேச்சை நம்பி இந்திய கப்பற்படையின்  தகவல்களை கப்பல் படையில் பணியாற்றி வந்த அதிகாரிகள் சிலம்  அவர்களுடன் பகிர்ந்துள்ளனர்.  இது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .  கைது செய்யப்பட்டவர்கள் விசாகப்பட்டினத்தில் பணியாற்றி வந்தவர்கள் ஆவர்.  ஏற்கனவே இவர்கள் பகிர்ந்துள்ள  ரகசியங்கள் கடற்படையின் கிழக்கு பிராந்தியம் தொடர்பானது என்பதால் விசாகப்பட்டினம் கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகம் மட்டுமல்லாது அணுசக்தியால் இயங்கும் ஹரிஹந்த்  என்ற நீர்மூழ்கி கப்பலின் கட்டுமான தளமும் ஆகும்.  

7 navy ca-menders  arrest by Andhra police for  leak our secret to Pakistan  agency

 எனவே என்ன மாதிரியான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது என்று விசாரணை நடத்த வேண்டிய அவசியம்  ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .  அதாவது ஆந்திர கடற்படை மற்றும் மத்திய உளவுப்படை இணைந்து நடத்திய டால்ஃபின் நோஸ் என்ற ரகசிய சோதனையில் இந்த 7 பேரும்  சிக்கினர்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios