அங்கு  அந்தப் பெண்ணை  ஆறு பேரும் கதற கதற பாலியல் பலாத்காரம்  செய்துள்ளனர் .  இடையிடையே தங்கள் செல்போனில் ஆபாச படத்தை பார்த்த அவர்கள் அதில் வரும் காட்சிகளைப் போலவே அந்தப் பெண்ணுடன் நடந்து  கொண்டுள்ளனர்.  

தங்களிடம் சிக்கிய சமையல்கார பெண்ணை பள்ளி சிறுவர்கள் கதற கதற கற்பழித்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஹைதராபாத் மகபூபாபாத் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது . பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதை கட்டுப்படுத்த அரசும் காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் வன்கொடுமைகள் கொஞ்சமும் குறைந்தபாடில்லை , சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் கால்நடை மருத்துவரை சமூக விரோத கும்பஃ ஒன்று பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யது கொன்ற நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மொகபூபாபாத்திலும் அதேபோன்ற பயங்கரம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மகபூபாபாத் மாவட்டம் அமங்கள் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பெண் கேட்டரிங் வேலை செய்து வருகிறார் , நேற்றைய தினம் வேலையை முடித்துவிட்டு தனது கிராமத்துக்கு செல்ல ரயில் நிலையம் வந்தார் . ஆனால் அவர் வருவதற்குள் அந்த ரயில் புறப்பட்டுவிட்டது . இதனால் செய்வதறியாது திகைத்த அந்தப் பெண் நீண்ட நேரம் ரயில் நிலையத்திலேயே காத்திருந்தார் . அப்போது தனது நண்பர்களையும் பெற்றோர்களையும் அவர் தொடர்பு கொள்ள முயன்றார் அப்போது மகபூப்பாபாத் நகரின் பலரமந்தாவில் வசிக்கும் தனது நண்பர் சந்துரு என்பவருக்கு கால் செய்து உதவிக்கு வருமாறு அழைத்தார் . உடனே ரயில் நிலையம் வந்த சந்துரு அந்தப் பெண்ணை மீட்டு அங்கிருந்து தண்டா என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார் . அதை தொடர்ந்து அங்கிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமங்களில் உள்ள தனது நண்பர்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் . பிறகு தன்னுடைய சக நண்பர்கள் 6 பேருடன் அந்தப்பெண்ணை மாந்தோப்புக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற அவர்கள். 

அங்கு அந்தப் பெண்ணை ஆறு பேரும் கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் . இடையிடையே தங்கள் செல்போனில் ஆபாச படத்தை பார்த்த அவர்கள் அதில் வரும் காட்சிகளைப் போலவே அந்தப் பெண்ணுடன் நடந்து கொண்டுள்ளனர். அத்துடன் மேலும் மூன்று நண்பர்களை வரவழைத்த அவரது நண்பர் சந்துரு அவர்களுடனும் அந்தப் பெண்ணை அனுபவித்ததாக தெரிகிறது. பின்னர் சுயநினைவிழந்த அந்த பெண்ணை அங்கேயே விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் . பின்னர் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் . அதில் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 6 பேரும் பள்ளி சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது .