Asianet News TamilAsianet News Tamil

ஆற்றங்கரையில் இளம் பெண்ணிடம் மாணவன் உல்லாசம் !! பெண்ணை மிரட்டி கற்பழித்த மாணவனின் நண்பர்கள் !!

காட்டுமன்னார்கோவில் அருகே இளம்பெண்ணை மிரட்டி மாணவர்கள் கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

3 students rape a girl
Author
Cuddalore, First Published Nov 13, 2019, 6:47 PM IST

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மேல ராதாம்பூர். இந்த பகுதியை சேர்ந்தவர் மாதவன் இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இவருக்கும், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த விசித்ரா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இவர்கள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

3 students rape a girl

இந்தநிலையில் மாதவன் தனது நண்பர்களான விக்னேஷ் , சூர்யபிரகாஷ்  ஆகியோரிடம் தான் விசித்ரா என்ற பெண்ணை காதலித்து வருவதாக கூறியுள்ளார்.

இதனிடையே நேற்று முன்தினம் மாதவன் தனது காதலி விசித்ராவை அங்குள்ள ஆற்றங்கரை பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஆசை வார்த்தை கூறி அவரிடம் உல்லாசமாக இருந்தார்.

3 students rape a girl

மாதவனும் , விசித்ராவும் ஆற்றங்கரையில் இருப்பதை அறிந்த  மாதவனின் நண்பர்கள் விக்னேஷ், சூர்யபிரகாஷ் ஆகியோர் ஆற்றங்கரை பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்கள் அங்கிருந்த விசித்ராவை மிரட்டி இருவரும் கற்பழித்தனர். இதற்கு மாதவனும் உடந்தையாக இருந்துள்ளார்.

பின்னர் மாதவன் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அதனைத்தொடர்ந்து விசித்ரா அழுதுகொண்டு வீட்டுக்கு சென்றார்.

3 students rape a girl

வீட்டில் இருந்த அண்ணன் மற்றும் தந்தையிடம் நடந்த விபரத்தை கூறி கதறி அழுதுள்ளார். தொடர்ந்து விசித்ராவின் அண்ணன் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து விக்னேஷ், மாதவன், சூர்யபிரகாஷ் ஆகிய 3 பேரையும்  இன்று காலை  போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

3 students rape a girl

அதேபோல் சூர்யபிரகாசும் கல்லூரியில் படித்து வருகிறார். இளம்பெண்ணை மிரட்டி மாணவர்கள் கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios