Asianet News TamilAsianet News Tamil

அதிகரிக்கும் உயிரிழப்பு.. ஒரே நாளில் 38 பேர் பலி.. 13 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா..

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,313 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

Today corona report - 13,313  case positive last 24hrs
Author
India, First Published Jun 23, 2022, 10:29 AM IST

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,313  பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,33,34,958 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் படிக்க: சற்று குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 12,249 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து   10,972 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,27,36,027 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.60  சதவீதமாக உள்ளது. 

அச்சறுத்தும் கொரோனா: 

தற்போது கொரோனா பாதிப்பினால் 83,990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம்  0.19 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,941 ஆக உள்ளது. நாட்டில் உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 196. 62 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,91,941 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க: Corona : முகக்கவசம் இருந்தால் கொரோனவை தடுக்கலாம்.. சுகாதாரத்துறை சொன்ன சூப்பர் தகவல் !
 

Follow Us:
Download App:
  • android
  • ios