Asianet News TamilAsianet News Tamil

சற்று அதிகரித்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 9 பேர் மட்டுமே பலி.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,841 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 9 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

Today corona case report - 9 corona death last 24hrs
Author
India, First Published May 13, 2022, 10:16 AM IST

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,841 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,16,254 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,827 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் இன்று சற்று அதிகரித்து 2,841 ஆக பதிவாகியுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.61 சதவீதமாகவும் வாராந்திர தொற்று பாதிப்பு 0.74 சதவீதமாகவும் உள்ளது.

மேலும் படிக்க: வடகொரியாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு.. முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர் கிம் ஜாங் உன்.

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 3,295 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,73,460 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.47 சதவீதமாக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பினால் 18,604  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.74 சதவீதமாக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,190 ஆக உள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 190.99 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,03,220 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இதுவரை 84.29 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,86,628 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: குறையும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 2,827 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

Follow Us:
Download App:
  • android
  • ios