Asianet News TamilAsianet News Tamil

TN Corona : தமிழகத்தில் ஒரே நாளில் 30,580 பேருக்கு கொரோனா... சென்னையில் மட்டும் 6,452 பேருக்கு தொற்று !!

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

tamilnadu corona case count reached 30 thousand
Author
Tamilnadu, First Published Jan 23, 2022, 9:05 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 30,744 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 164 குறைந்து 30,580 ஆக பதிவாகியுள்ளது. 1,57,732 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,580 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 30,580  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 6,452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 6,383 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 6,383 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 30,567 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 13 பேர் என 30,580 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

tamilnadu corona case count decreasing day by day

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 40 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,218 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 25 பேரும் தனியார் மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,00,954 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 1,94,697ல் இருந்து 2,00,954 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 24,283 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 28,95,818 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,886 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,912 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 2,377 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,841 ஆக குறைந்துள்ளது. திருவள்ளூரில் 1,069 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 751 ஆக குறைந்துள்ளது.

tamilnadu corona case count decreasing day by day

திருப்பூரில் 1,014 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,507 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 1,066 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,220 ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் 1,266 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,248 ஆக குறைந்துள்ளது. மதுரையில் 565 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 622 ஆக அதிகரித்துள்ளது. நெல்லையில் 828 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 608 ஆக குறைந்துள்ளது. தஞ்சையில் 840 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 684 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரியில் 878 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 1,010 ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் 1,080 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 1,074 ஆக குறைந்துள்ளது. இதேபோல் திருச்சி 757, தி.மலை 547, விருதுநகர் 524, நாமக்கல் 695 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios