Asianet News TamilAsianet News Tamil

TN Corona : கொரோனா பிடியில் தடுமாறும் தமிழகம்… 23 ஆயிரத்தை கடந்தது ஒருநாள் பாதிப்பு!!

தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 23 ஆயிரத்தை கடந்து ஒருநாள் பாதிப்பு 23,459 ஆக அதிகரித்துள்ளது. 

tamilnadu corona case count reached 23 thousand
Author
Tamilnadu, First Published Jan 14, 2022, 7:46 PM IST

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 20,911 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,548 அதிகரித்து 23,459 ஆக பதிவாகியுள்ளது. 1,50,037 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23,459 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 23,459 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 8,963 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 8,218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து 8,963 ஆக உள்ளது. தமிழகத்தில் 23,438 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 21 பேர் என 23,459 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

tamilnadu corona count increased upto 5000

கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 26 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,956 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 15 பேரும் தனியார் மருத்துவமனையில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,18,017 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 1,03,610இல் இருந்து 1,18,017 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 9,026 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,36,986 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2,030 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,504 ஆக குறைந்துள்ளது. அதே போல் கோவையில் 1,162 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,564 ஆக குறைந்துள்ளது.

tamilnadu corona count increased upto 5000

திருவள்ளூரில் 901 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,393 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 599 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 631 ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் 426 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 499 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 410 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 355 ஆக குறைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் 502 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 802 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 538 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 572 ஆக அதிகரித்துள்ளது. திருச்சியில் 465 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 477 ஆக அதிகரித்துள்ளது. நெல்லையில் 415 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 353 ஆக குறைந்துள்ளது. தஞ்சையில் 346 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 410 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios