தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 24,418 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,180 குறைந்து 22,238 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 22,237, வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் என 22,238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,36,952 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 22,238 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 22,238 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 4,508 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 3,998 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,998 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 38 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,544 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 15 பேரும் தனியார் மருத்துவமனையில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 2,03,926 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 26,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 30,84,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,309 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,865 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 1,614 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,534 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 866 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 809 ஆக குறைந்துள்ளது.

