தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 400க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 400க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 366 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 348 ஆக குறைந்துள்ளது. 55,474 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 348 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


சென்னையில் ஏற்கனவே 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 92 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,006 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,745ல் இருந்து 5,066 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,025 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.