Asianet News TamilAsianet News Tamil

ஒரே அடியாக ஏறிய கொரோனா.. அதிர்ச்சியில் மக்கள்.. கடந்த 24 மணி நேர பாதிப்பு நிலவரம்..

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 72 ஆக அதிகரித்துள்ளது. 

72 cases positive last 24hrs in TamilNadu
Author
Tamilnádu, First Published Apr 26, 2022, 9:26 PM IST

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 72 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 72 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 404 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,250 ஆக உள்ளது. 

மாவட்ட வாரியாக:  அரியலூர் 0, செங்கல்பட்டு 9, சென்னை 72, கோயம்புத்தூர் 2, கடலூர் 0, தர்மபுரி 0, திண்டுக்கல் 0, ஈரோடு 0, கள்ளக்குறிச்சி 0, காஞ்சிபுரம் 2, கன்னியாகுமரி 0, கரூர் 0, கிருஷ்ணகிரி 0, மதுரை 1, மயிலாடுதுறை 0, நாகப்பட்டிணம் 0, நாமக்கல் 0, நீலகிரி 0, பெரம்பலூர் 0, புதுகோட்டை 0, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 0, சேலம் 1, சிவகங்கை 0, தென்காசி 0, தஞ்சாவூர் 0, தேனி 0, திருப்பத்தூர் 0, திருவள்ளூர் 3, திருவண்ணாமலை 0, திருவாரூர் 0, தூத்துக்குடி 0, திருநெல்வேலி 0, திருப்பூர் 0, திருச்சி 0, வேலூர் 1, விழுப்புரம் 0, விருதுநகர் 0 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios