யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் முதல் 4 இடங்களை மகளிர் பெற்றுள்ளனர்.

2022ஆம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய குடிமைப் பணித் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 4 இடங்களை மகளிர் பெற்றுள்ளனர். ஆளுமைத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் upsc.gov.in இல் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

2022 செப்டம்பரில் நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வின் எழுத்துப் பகுதியின் முடிவு மற்றும் 2023 ஜனவரி-மே மாதங்களில் நடத்தப்பட்ட ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் UPSC தகுதிப் பட்டியலைத் தயாரித்துள்ளது. இந்த ஆண்டு முதல் நான்கு இடங்களை பெண் வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். முதல் 10 வேட்பாளர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

1. இஷிதா கிஷோர்

2. கரிமா லோஹியா

3. உமா ஹரத்தின்

4. ஸ்மிருதி மிஸ்ரா

5. மயூர் ஹசாரிகா

6. கஹானா நவ்யா ஜேம்ஸ்

7. வசீம் அகமது பட்

8. அனிருத் யாதவ்

9. கனிகா கோயல்

10. ராகுல் ஸ்ரீவஸ்தவா

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?