தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 

தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தலைமைச் செயலக பணியில் அடங்கிய தமிழ் மற்றும் ஆங்கில நிருபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பணி விவரங்கள்: 

பதவி: 

  • நிருபர் பணி ((செய்தியாளர்) (தமிழ் மற்றும் ஆங்கிலம்))

காலிபணியிடங்கள்: 09

தகுதி: 

  • விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டப்படிப்புடன் தட்டச்சுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தொழில்நுட்பக்கல்வி இயக்குநராகத்தால் நடத்தப்படும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

  • இந்தப் பணியிடங்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

ஊதியம்: 

  • தேர்வாகும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை:

  •  www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: 

  • 12.10.2022

விண்ணப்பக் கட்டணம்:

  • விண்ணப்பக் கட்டணம் ரூ.150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • தேர்வுக் கட்டணம் ரூ.200, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்: 

  • அக்டோபர் 17 முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும்.

கணினி வழித்தேர்வு: 

  • செய்தியாளர் பணிக்கான கணினி வழித்தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும்.