Asianet News TamilAsianet News Tamil

B.sc நர்சிங் முடித்தவர்களுக்கு அருமையான வேலை.. எய்ம்ஸ் மருத்துவமனையில் காலி பணியிடம்.. எழுத்து தேர்வு எப்போது?

எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் தேசிய காசநோய் நிறுவனத்திலும் காலியாக உள்ள செவிலியர் அதிகாரிகள் பதவிகளுக்கான NORCET எழுத்துத் தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

Nursing officer posts - Nursing Officer Recruitment Common Eligibility Test (norcet) 2022 dates announced
Author
India, First Published Aug 14, 2022, 5:19 PM IST

காலி பணியிடங்கள்:

புதுடெல்லி, குவகாத்தி  என நாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும், தேசிய காசநோய் நிறுவனத்திலும்  காலியாக செவிலியர் அதிகாரிகள் பணியிடங்கள்
 
விண்ணப்பிக்கும் தேதி: 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு நடைபெறும் நாள்: 

நர்சிங் ஆபீசர் ஆள்சேர்ப்பு பொது திறன் தேர்வு (NORCET) 2022 செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. 

மேலும் படிக்க:NLC யில் காலி பணியிடங்கள்.. பொறியியல் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

கல்வித்தகுதி: 

முதலாவது: 

நர்சிங் தொடர்புடைய படிப்புகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாமல் இருத்தல் வேண்டும். 

முக்கிய குறிப்புகள்: 

பல்கலைக்கழகம் அல்லது மாநில நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட் / இந்தியன் நர்சிங் கவுன்சில்-லிருந்து B.Sc Nursing / B.Sc (Hons) Nursing படித்திருக்க வேண்டும்.

பல்கலைக்கழகம் / இந்திய செவிலியர் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட்/இந்தியன் நர்சிங் கவுன்சில் - லிருந்து  B.sc. (Post  Certificate)/ Post-Basic B.Sc. Nursing படித்திருக்கலாம்

மாநில / இந்திய செவிலியர் கவுன்சிலில் மருத்துவ பணிப்பெண் மற்றும் செவிலியராக பதிவு செய்திருக்க வேண்டும்.

இரண்டாவது:

குறிப்பிடப்பட்ட படிப்புகளில் டிப்ளமோ முடித்தவர்கள், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்புகள்:

போர்டு அல்லது கவுன்சில் / மாநில செவிலியர் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட் / இந்தியன் செவிலியர் கவுன்சில் -லிருந்து பொது செவிலியர் மருத்துவ பணிப்பெண் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

அதே போல் மாநில/ இந்திய செவிலியர் கவுன்சிலில் செவிலியர் மற்றும் மருத்துவ பணிப்பெண்ணாக பதிவு செய்திருக்க வேண்டும்.

மேலும் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு வருட பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை.. 12 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. விண்ணப்பிப்பது எப்படி..?

சம்பள விவரம்: 

குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை வழங்கப்படும். 

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்களுக்கு வயது 18 யிலிருந்து 30க்குள் இருக்க வேண்டும்.  எஸ்.டி, எஸ்.சி பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து 5 ஆண்டு வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டு வரை வயது சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பக் கட்டணம்: 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.3000 ஆக செலுத்த வேண்டும். எஸ்.டி, எஸ்.சி, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ரூ.2400 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனை: 

ஒதுக்கப்படாத இடங்களுக்கு போட்டியிடும் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு தளர்வு அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  aiimsexams.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூடுதல் தகவல்களை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios