Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

job vacancy in child protection department and here the details about how to apply
Author
First Published Mar 13, 2023, 9:38 PM IST

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்: 

பதவி: 

  • சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer) 
  • உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) 

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer ):

கல்வித் தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தவராகவும் பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு / அரசு சாரா நிறுவனம் / சட்டம் சார்ந்த நிறுவனங்களில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
  • பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

இதையும் படிங்க: இந்திய நாடாளுமன்றத்தில் வேலை.. மாதம் 1 லட்சம் வரை சம்பளத்தில் காத்திருக்கிறது மத்திய அரசு வேலை

சம்பள விவரம்:

  • ரூ.27,804 / மாதம்

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator):

கல்வி தகுதி: 

  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior level) முடித்திருக்க வேண்டும். 
  • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும்.
  • கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்:

  • ரூ.13,240 / மாதம்

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பதாரர்கள் https://coimbatore.nic.in -என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

இதையும் படிங்க: 8ம் வகுப்பு படித்தால் போதும்.. மாதம் ரூ.50,000 சம்பளத்தில் காத்திருக்கிறது தமிழக அரசு வேலை !!

முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர் – 641 018

கடைசி தேதி: 

  • 15.03.2023 

இந்தப்பணி தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios