Asianet News TamilAsianet News Tamil

UPA Vs NDA: கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலை எவ்வளவு அதிகரித்துள்ளது?

நரேந்திர மோடி அரசாங்கம் பல்வேறு விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) கணிசமாக உயர்த்தி அறிவித்து, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

UPA Vs NDA: How Minimum Support Prices have risen significantly Rya
Author
First Published Mar 1, 2024, 12:14 PM IST

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

விரிவான குறைந்தபட்ச விலை அறிவிப்பு

ஆண்டுதோறும், 14 கரீப் பயிர்கள், 6 ராபி பயிர்கள் மற்றும் 2 வணிகப் பயிர்களை உள்ளடக்கிய 22 முக்கிய விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவித்து வருகிறது. மேலும், கடுகு மற்றும் கொப்பரை தேங்காய் ஆகியவையும் குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

விவசாயிகள் நலனுக்கான அர்ப்பணிப்பு

2018-19 மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசு உறுதியளித்த படி, அகில இந்திய எடையுள்ள சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 50 சதவிகிதம் அதிகமாக இருப்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் தொடர்ந்து குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியுள்ளது. குறிப்பாக, இந்தக் கணக்கீடு குடும்ப உழைப்பு, தனிப்பட்ட விவசாயிகளை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், முழு விவசாயக் குடும்பங்களின் கூட்டு முயற்சிகளை அங்கீகரிப்பது போன்ற காரணிகளையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது.

கொள்முதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கொடுப்பனவுகள்

அரசாங்கத்தின் முன்முயற்சியான நடவடிக்கைகள் காரணமாக கொள்முதல் மேம்பட்டதுடன், விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்தவும் வழிவகை செய்தது. குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு காரணமாக விவசாயிகளுக்கு நன்மை பயப்பதை றுதி செய்கிறது. உணவு தானியங்கள் கொள்முதல் 2014-15ல் 761.40 லட்சம் மெட்ரிக் டன்-ல் இருந்து 2022-23ல் 1062.69 லட்சம் மெட்ரிக் டன் ஆக உயர்ந்து, இதன்மூலம் 1.6 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.. குறைந்தபட்ச ஆதார விலை மதிப்பில் கணக்கிடப்பட்ட உணவு தானியங்கள் கொள்முதலுக்கான செலவினம் ரூ. 1.06 லட்சம் கோடியிலிருந்து ரூ. 2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

கொள்முதலில் குறிப்பிடத்தக்க முதலீடு

கடந்த பத்தாண்டுகளில் (2014-24) 6751 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய அரசு ரூ.12.18 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 3073 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை வாங்க 5.44 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது முந்தைய தசாப்தத்துடன் (2004-14) ஒப்பிடும்போது பன்மடங்கு அதிகமாகும். இதனால் ரூ.4.40 லட்சம் கோடி செலவில் 4590 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2140 லட்சம் மெட்ரிக் டன் கோதுமைக்கு 2.27 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.. இந்த முயற்சிகள் விவசாயத்திற்கும் விவசாயிகளின் நலனுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, இது விவசாய சமூகத்தில் நிலையான ஆதரவையும் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..

Follow Us:
Download App:
  • android
  • ios