நடப்பாண்டில் இருந்து ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் . ஏற்றுமதி கடன் வழங்குவதற்கு நிர்விக் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி முதலீடு
மத்திய பட்ஜெட் 2020 - 2021

மத்திய அரசின் பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
ஏற்றுமதி கடன் வழங்குவதற்கு நிர்விக் என்ற புதிய திட்டம்
வர்த்தக மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.27,300
தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு
புதிய 5 ஸ்மார்ட் சிட்டி
புதிய 5 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
திருவள்ளுவர் கூறிய ஐந்து முத்தான செல்வங்கள்
'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து' என்ற திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டினார் நிர்மலா சீதாராமன். திருவள்ளுவர் கூறிய ஐந்து முத்தான செல்வத்தை பிரதமர் தனது திட்டங்கள் மூலம் இந்தியா முழுவதும் செயல்படுத்தி வருகிறார்
ஒவ்வொரு குடும்பமும் மாதம் 4 சதவீதம் வரை சேமிப்பு
ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஒவ்வொரு குடும்பமும் மாதம் 4 சதவீதம் வரை சேமிக்கிறது. ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 60 லட்சம் பேர் புதிதாக வரி செலுத்தி உள்ளனர்
தானிய லட்சுமி சிறப்பு திட்டம்
கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
பெண்களுக்கான திருமண வயது 18 குறைக்க முடிவு..?
பெண்களுக்கான திருமண வயது 18 என்று தற்போது உள்ள நிலையில், அதனை மீண்டும் ஆய்வு செய்து அந்த வயது வரம்பை அதிகரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேஜஸ் வகை ரயில்கள் இயக்க நடவடிக்கை
சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணைந்து நிறைய தேஜஸ் வகை ரயில்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
3 ஆண்டுக்குள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஸ்மார்ட் மின்சார மீட்டர்
அடுத்த 3 ஆண்டுக்குள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை பொருத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த 5 இடங்கள்
இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த 5 இடங்கள் உலக தரத்தில் மேம்படுத்தப்படும். அதில், தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு
ஆண்களை விட பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்க திட்டம்
நாடு முழுவதும் 100 புதிய விமானநிலையங்கள்
2024க்குள் நாடு முழுவதும் 100 புதிய விமானநிலையங்கள் அமைக்கப்படும்
ஜி.எஸ்.டி ரிட்டன்ஸ் தாக்கல் செய்வதற்கு புதிய எளிய வழி
ஜி.எஸ்.டி ரிட்டன்ஸ் தாக்கல் செய்வதற்கு புதிய எளிய வழிமுறையை ஏப்ரல் 2020 முதல் அமலாகும்
விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு... பட்ஜெட் உரையில் அதிரடி அறிவிப்பு..!
விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வருகிறது எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை..
சென்னை-பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்பட இருக்கிறது.
100 புதிய விமான நிலையங்கள்
நாடு முழுவதும் 2024 ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது
தனியார் பங்களிப்புடன் புதிய ரயில்கள்
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் புதிய ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் வருகிறது புதிய பாடத்திட்ட முறை
150 பல்கலைக்கழகங்களில் புதிய பாடப்பிரிவுகள் அமலுக்கு வரும்; முன்னணி பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று பட்டம் வழங்கும் முறை அமல்படுத்தப்படும்
கிராம பெண்களுக்கு தானிய லட்சுமி
கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாராளுமன்றத்தில் ஒலித்த ஆத்திச்சூடி..!
பூமி திருத்தி உண்” என்ற 3 வார்த்தைகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஔவையாரின் ஆத்திச்சூடியை மேற்கோள்காட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்