தேசிய நெடுஞ்சாலைகளில் மது விற்பனை : உச்சநீதிமன்றம் அதிரடி தடை .....!!!
தேசிய நெடுஞ்சாலைகளில் மது விற்பனை : உச்சநீதிமன்றம் அதிரடி தடை .....!!!
தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுவிற்பனை செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உத்தரவைப் பிறப்பித்தது.
நெடுஞ்சாலைகளில் மது விற்பனை செய்வது தடுக்கும் பொருட்டு இதுவரை மாநிலங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என , மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.
இந்நிலையில், நெடுஞ்சாலைதுறையும் , மதுவிற்பனை குறைக்கவும், விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டும் , மது பார்களை அகற்ற வேண்டும் என மாநில அரசுக்கு வலியுருத்தியது.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணை, இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது.
விசாரணை முடிவில், தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுவிற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையில் எந்த மாற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.